கிழக்கு வாசல்... வன்முறை அதிகமா இருக்குமோ?
சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் பிரமாண்டமான தயாரிப்பா இருக்கு. இது தெலுங்கு டப்பிங் சீரியல்னாலும் நிழல்கள் ரவி, ஆனந்த் நடிச்சு இருக்கறதுனால சீரியல் அந்நியமா தெரியலை.
தேவராஜ், நாகப்பன் ரெண்டு பெரும் ஊர் பெரும் தலைக்கட்டு. ஆனால், இருவருக்குள்ளும் ஏதோ விரோதம் இருக்கு. இருவருமே கோயில் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யறாங்க.
போலீஸ் இருவரையும் அழைச்சு பேசறாங்க. ஆனாலும் எடுபடலை. இன்னும் விரோதம்தான் அதிகரிக்குது. இரு குடும்பத்தாரும் மேள தாளங்கள் முழங்க, வீட்டு பெண்கள் மண்சட்டியில் விளக்கு எடுத்து தலையில் வைத்துக்கொண்டு கிளம்பறாங்க.
எனக்கு கிரஷ் நடிகர் விஜய் மேலதான்..சோனியா அகர்வால்
பார்க்க கூடாது
விளக்கை தலையில் வச்சதும் திரும்பி பார்க்க கூடாதுன்னு ஒரு பாட்டி வந்து சொல்றாங்க. நாகப்பன் குடும்பம் மட்டும் கிளம்பறாங்க. தேவராஜ் அதாவது நிழல்கள் ரவி தன் குடும்பத்தை கிளம்பின கையோடு அப்படியே நிறுத்திவிட்டு, ஆசுவாசமாக பாட்டு கேட்டுகிட்டு வெளியில் சேரில் உட்கார்ந்து இருக்கார்.
காணாமல்
நாகப்பன் குடும்பம் கிளம்பிவிட, ஊர் மக்களும் அவர்களுடன் கோயிலுக்கு போறாங்க. பாதுகாப்புக்கு போலீஸ்..அடியாட்கள் வேற. நாகப்பனின் இரு பெண்கள் மற்றும் மனைவி விளக்கை தலையில வச்சுக்கிட்டு நடக்கறாங்க.
காணாமல்
அடியாட்களில் ஒவ்வொரு ஆளாக காணாமல் போக, தங்கை அக்காவிடம் சொல்லிகிட்டே வர்றா. இல்லை..எங்காவது பின்னால் வருவாங்க..நீ பயப்படாம வான்னு சொல்றா.
அதிர்ச்சி
ஒரு கட்டத்தில் ஒருவன் மட்டுமே பாதுகாப்புக்கு வர, அக்கா பாரு..ஒருத்தன் மட்டும்தான் இருக்கான்னு சொல்றா. அக்கம் பக்கம் லேசாக திரும்பி பார்த்த அக்கா அதிர்ச்சியாகறா.நாலு பேருமே இல்லை.
மனைவி
அதுக்குள்ள விளக்கை எடுத்துக்கிட்டு வரும் நாகப்பனின் மனைவி திரும்பி பார்த்துடறாங்க. நாகப்பன் வந்து எதுக்கு திரும்பின.. விளக்கை எடுத்துக்கிட்டு வரும்போது திரும்பி பார்க்கக்கூடாதுன்னு உனக்குத் தெரியாதான்னு கேட்கறார்.
அங்கு இரு அடியாட்கள் விழுந்து கிடக்கறாங்க.. பகீர் பகீர்னு கலவரம் நடக்கற மாதிரியே காட்சிகளை எடுத்து இருக்காங்க.