ஜுரத்தில் படுத்துடறான் ரவி.. துரத்தி விடறாளே உமா...!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் அடிக்கடி எதாவது திருப்பங்களுடன் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஒளிபரப்பாகிட்டு இருக்கு.
ஒண்ணு குடும்பத்துல அதிரடி திருப்பங்கள், இல்லையா பாக்கியலட்சுமி, ரவி இடையே ஏற்படும் ரொமான்ஸ் திருப்பங்கள்.. அதுவும் இல்லையா பிசினெஸ் திருப்பங்கள்னு சுவாரஸ்யமா இருக்கு.
மினிஸ்டர் சகுந்தலா தேவி செய்த சதி வேலையால பாக்கியலட்சுமி, ரவி, டாக்டர் தம்பி எல்லாரும் ஜெயிலுக்கு போறாங்க. அப்போ காப்பாத்தி அழைச்சுட்டு வர்றாங்க மகாலட்சுமி.
பாக்கிய லட்சுமியை அவங்க அண்ணி, ஜெயிலுக்கு போயிட்டு வந்தவள்னு சொல்லி வீட்டுல சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிடறாங்க. மகாலட்சுமி தன் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடறாங்க.
ஏழைப் பெண்ணை துரத்தி.. அம்மன் நகைகளை போட்டு.. ஆமா, இவங்க என்ன டிசைன்?
அப்போலேர்ந்து பாக்கியலட்சுமியை வீட்டை விட்டு விரட்ட, ரவியை ஒருதலையா காதலிக்கும் தேஜா கூட சேர்ந்து பல கெட்ட வேலைகள் செய்யறாங்க. அந்த வீட்டில் எல்லாருக்கும் பாக்கியலட்சுமியை பிடிச்சு இருந்தாலும், டாக்டர் பொண்ணு உமாவுக்கு மட்டும் பிடிக்கலை. அதுவும் தேஜா சொல்லிக் கொடுப்பதால்.
கடைசியா உமாவும், தேஜாவும் சேர்ந்து பாக்கிய லட்சுமிக்கு 10 நாளைக்கு கடுமையான ஜுரம் வர்ற மாதிரியான மாத்திரையை ஜூஸில் கலந்து குடுக்க முடிவு செய்யறாங்க.
டக்கர் பாப்பா உமா, கொஞ்சமும் மனசாட்சி இல்லாம மாத்திரையை நுணுக்கி ஜூஸில் கலந்து பாக்கிய லட்சுமிக்கு குடுக்க வச்சுடறாங்க. ஆனா, பாக்கிய லட்சுமி கிட்ட இது உனக்கான ஸ்பெஷல்னு ரவி குடுக்க, எந்த ஸ்பெஷலா இருந்தாலும் உங்களுக்குத்தான் ரவின்னு பாக்கிய லட்சுமி ரவிகிட்ட ஜூஸை கொடுத்ததை உமா பார்க்கலை..
தேஜாவுக்கு போன் செய்து, ஜூஸை குடுத்துட்டேன்னு குதூகலிக்கறா. கடைசியில ரவி குடிச்சுட்டு கடுமையான ஜுரத்துல கிடக்கான். அந்த சமயம் பார்த்து குஷ்பூக்கு தெரியாம உமா சொல்றாங்க..இங்க என்னடி அழுதுகிட்டு, அவன் காலை தேய்ச்சு விடறே..
நீ என்ன இந்த குடும்பத்து ஆளா.. வெளியே போடின்னு மெதுவா கடுப்புல பேசறாங்க உமா பாக்கியலட்சுமியைப் பார்த்து. அவ உடனே காலை தேய்ச்சு விடறதை நிறுத்திட்டு, எழுந்து நிற்க.. வெளியில போடின்னு மறுபடியும் அதட்டறாங்க. பாக்கியலட்சுமி அழுதுகிட்டே கேட்டுக்கு வெளியே நிக்கறா.