Lakshmi Stores Serial: பழமை மாறாத கொல்கத்தா.. அதை விட அழகான குஷ்பு.. !
மேற்கு வங்கம்: கொல்கத்தா மிகவும் பழமை வாய்ந்த நகரமாகவே பல விஷயங்களில் இன்னும் காட்சி அளித்தாலும், இப்படிப்பட்ட பழமையை ரசிப்பதும், இங்குதான் நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பதாலும், கொல்கத்தா இன்னும் ரசிக்க வைக்கும் நகரமாகவே இருக்கிறது.
மக்கள் கூட்டம் அலை அலையாக அங்கங்கு இருந்தாலும், அந்த பரபரப்பு கொல்கத்தா செல்லும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்.வட மாநிலங்கள் பக்கம் நம்ம ஊர் போல ரோஜா, மல்லிகை, மரிக்கொழுந்து இப்படிப்பட்ட பூக்களை மக்கள் விரும்புவதில்லை போலும்.
பெரும் தலைவர்கள் வந்தால் கூட மஞ்சள் கலரில் இருக்கும் செவ்வந்தி பூ மாலைதான் அங்கு ஸ்பெஷல்.அதைத்தான் மக்கள் கோயிலில் சாமிக்கு கூட அணிவிக்கிறார்கள்.
கொல்கத்தாவில் குஷ்பூ
சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மத்திய இணை அமைச்சர் சகுந்தலா தேவியின் லீகல் அட்வைசர் தேவராஜ். இவரது தம்பி ரவியை மினிஸ்டரின் மகள் தேஜா திருமணம் செய்துக்க ஆசைப்பட, அப்போது சம்மதித்த தேவராஜ், இப்போது சம்மதிக்கவில்லை. இதனால், மினிஸ்டரின் தங்கை,தம்பியால் தாக்கப்பட்ட அவரை அறையில் அடைச்சு வச்சு இருக்காங்க.
காணோம் தேவராஜை
இரண்டு நாட்களாக வீட்டுக்கு வரவில்லை தேவராஜ். அனால், இங்கு பாக்கியலட்சுமிக்கும், ரவிக்கும் மகாலட்சுமி கல்யாண ஏற்பாடுகளை ஆரம்பித்து இருக்காங்க. அதே போல மினிஸ்டர் வீட்டில் தேஜாவுக்கும் ரவிக்கும் கல்யாண ஏற்பாடுகள் நடத்தி வர்றாங்க.
யாருடன்தான் கல்யாணம்?
அப்போ ரவிக்கு யாருடன்தான் கல்யாணம் நடக்கப் போகுதுன்னு நமக்கே குழப்பமாக இருக்கிறது. இந்த நேரத்தில் தேவராஜை காணோம் என்று மகாலட்சுமி கவலையில் இருக்க, அவர் கொல்கத்தாவில் இருப்பதாக துப்பு கிடைக்கிறது.
கொல்கத்தாவுக்கு மகாலட்சுமி
புருஷனைத் தேடி கொல்கதாவுக்கு தனியா போறாங்க மகாலட்சுமி. அங்கு சாலையில் பேருந்துடனே பயணிக்கும் ரயில், அழகான ஹவுரா ப்ரிட்ஜ் என்று அத்தனையையும் மகாலட்சுமியுடன் சேர்ந்து நாமும் கண்டு களிக்கலாம். புருஷன் தேவராஜை மகாலட்சுமி தேடட்டுமே...!
சரி அதை விடுங்க.. கொல்கத்தாவை விட அழகு மாறாமல் இருக்கும் குஷ்புவைக் காண தவறாதீங்க மக்களே!