Lakshmi Stores Serial: கையில தாலி குடுத்தா யாருக்கு வேணா கட்டிகிட்டே இருப்பியளா தம்பி?
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலை இந்த வாரம் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கு ஒளிபரப்ப நினைத்து அதை செய்து வருகிறார்கள்.
நந்தினி சீரியலில் கங்காவாக நடித்த நித்யா ராம், தெய்வமகள் சீரியலில் காயத்ரியாக பிரபலம் ஆனா ரேகா இருவரும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதா பாத்திரங்களாக வருகிறார்கள்.
நித்யா ராம் என்ட்ரி காட்சி காமெடியாக இருந்ததால் அதைப்பற்றி கொஞ்சம் பகிர்வு.
Eeramana Rojave Serial: உன் கூட போயி எப்படிடா? ஐயோ கொல்றானே!
வீட்டுக்குள் என்ட்ரி
முக்காடு போட்டுக்கொண்டு ஒரு பெண் மகா லட்சுமியின் வீட்டுக்குள் நுழைந்து ரவி ரவி.. எங்கங்க போயிட்டீங்கன்னு கத்திகிட்டே நுழையறா. அப்பப்பா காது ஜவ்வு கிழிஞ்சு போற மாதிரி யாரு இப்படி கத்திக்கிட்டு வர்றதுன்னு வேலைக்காரி பொன்னம்மா வராங்க. யாரும்மா நீ ரவி ரவின்னு எங்க கிரிக்கெட் தம்பியை ஏலம் விட்டுகிட்டு இருக்கேன்னு கேட்கறாங்க.
ரவி வரவு
மேலே இருந்து ரவி வந்து யாரு பொன்னம்மாக்கா இதுன்னு கேட்கறாங்க. அதைத்தான் நானும் கேட்டுகிட்டு இருக்கேன். உங்க பேரைத்தான் தம்பி சொல்லுதுன்னு சொல்றாங்க.என் பேரையா? யாருக்கா நீங்கன்னு கேட்கிறான்.என்னாது அக்காவா? முனீஸ்வரன் கோயில்ல தாலியை கட்டிப்புட்டு, இப்போ அக்கான்னு கூப்பிடறியான்னு கேட்கிறாள் அந்த பெண்.
கையில் தாலி
சரிதான் கிரிக்கெட் தம்பி.. உங்க கையில தாலியை குடுத்துட்டா யாருக்கு வேணும்னாலும் கட்டிகிட்டே இருப்பீங்க போல இருக்கேன்னு பொன்னம்மா கலாய்க்கறாங்க. அக்கா.. நீங்களுமா? இந்தாம்மா உன்னை முன்னே பின்னே தெரியாது..தாலி கட்டினேன்னு சொல்றேன்னு கேட்டுக்கொண்டு இருக்கும் போதே மகாலட்சுமி வர்றாங்க.
நித்யா இங்கே
ஹாய் நித்யா இங்கே என்ன.. எப்போ வந்தே? எப்படி இருக்கேன்னு கேட்க, அண்ணி யாரு இது.. என்னை தாலி கட்டினேன்னு சொல்லி பயமுறுத்திட்டாங்கன்னு சொல்றான் ரவி.உனக்கு தெரியலையா ரவி..என் சித்தி பொண்ணு நித்யாதான் இவ..உன்னை கலாட்டா பண்ணி இருக்கான்னு சொல்றாங்க.
இந்த காட்சி நகைச்சுவையாக இருந்தது. அதனாலே இந்த பகிர்வு..