Lakshmi Stores Serial: சொல்ல வந்ததை சொல்லாமலே ஏன் போகிறாள்?
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில், முக்கியமான விஷயத்தை ரவியிடம் சொல்ல வருகிறாள் பாக்கியலட்சுமி. ஆனால், சொல்ல வந்த முக்கியமான விஷயத்தை சொல்லாமலே ஏன் போகிறாய் என்று கேட்கும் அளவுக்கு காட்சிகள் இருக்கிறது.
மினிஸ்டர் மகள் தேஜாவும் ரவி மீது ஆசைப்பட, அவளுக்கு ரவி பாக்கியலட்சுமி கழுத்தில் கட்டிய திருட்டு தாலி பற்றி தேஜாவுக்கு தெரிஞ்சு போச்சு.
அவள் தனது தாய் மாமனுடன் சேர்ந்து பாக்யலட்சுமியின் கழுத்தில் இருக்கும் ரவி கட்டிய தாலியை கழட்ட சொல்லி அட்டூழியம் பண்றாங்க. பாக்கியலட்சுமி தவிச்சுக்கிட்டு நிற்கிறாள்.
Sun tv Serials: சீரியல்களில் மட்டும் இப்படி சகுனம் காமிக்குதே!
வரவச்ச பாக்கியலட்சுமிக்கு
கெஸ்ட் ஹவுஸுக்கு வரவச்ச பாக்கியலட்சுமிக்கு விருந்து வச்சு சாப்பிட சொல்லி மிரட்டறார் தேஜாவின் தாய் மாமா.எதுக்கு இப்படி செய்யறீங்க. என்னை விட்ருங்கன்னு அவ கெஞ்சியும் விட மாட்டேன்னு சொல்ற மாமா, ரவி உன் கழுத்துல கட்டின தாலியை நீயே கழட்டிடு விட்டுடறேன்னு மிரட்டறான்.
வெள்ளிக்கிழமை கழட்டு
அதுவும் இன்னிக்கு வேணாம்..வருகிற வெள்ளிக்கிழமை அன்னிக்கு ரவி கட்டிய தாலியை கழட்டிட்டு.அப்டீன்னா உன் தங்கச்சி நல்லா இருப்பா.இல்லே.உன் தங்கச்சியை நான் கல்யாணம் செய்துக்குவேன்னு சொல்லி தேஜாவின் வயசான தாய் மாமன் மிரட்டறான்.
அறுத்தெறிய வேண்டியதுதானே
பாக்கியலட்சுமி கழுத்தில் ரவி கட்டிய தாலியை கழட்ட சொல்லணும்னு முடிவாயிருச்சு.அதை உடனே அவங்களே கழட்டி தூக்கி எறிய வேண்டியதுதானே. அதை வெள்ளிக் கிழமை நீயே உன் கையால கழட்ட வேண்டும் என்று ஒரு ஆர்டர் வேற போடறாங்க .அப்போதுதான் அவள் மனசு வலிக்குமாம்.
ரவிகிட்டே சொல்ல
இந்த பிரச்னையை ரவிகிட்டே சொல்ல, அவன் வீட்டுக்கு ராத்திரி நேரத்தில் வருகிறாள் பாக்கியலட்சுமி. அதுக்குள்ளே. அண்ணன் ரூம் கதவைத் தட்டி சார்ஜர் கேட்கிறார்.டாக்டர் பாப்பா நடந்து வருது.கமலா பாட்டு கேட்டுகிட்டு வர்டி பக்கம் போயி என்ன பிரச்சனை சொல்லுன்னு கேட்க, .அங்கே பார்க்கறா, இங்கே பார்க்கறா..அவன் மார்பிலே சாய்ந்து அழறா.
கடைசியில குஷ்பூ வந்துடறாங்க. அப்புறம் என்ன என்ன விஷயம் என்ன விஷயம்னு கேட்டு அலுத்துப் போன ரவி அண்ணி பேச்சை கேட்டுகிட்டு, பாக்கிய லட்சுமியை அனுப்பி வச்சுடறான்.
எதுக்கு இப்படியே எபிசோடை இழுக்கறீங்க? எங்களுக்கு போரடிக்குதுல்ல!