நம் மனசை மகிழ்விச்சார்.. எஸ்பிபி குணமடைய வேண்டும்.. லதா ராவ் உருக்கம்
சென்னை: பிரபல பாடகர் பாலசுப்பிரமணியன் தற்போது பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் பல ரசிகர்களும் நடிகர்களும் அவருக்காக அவர் சீக்கிரமாக வரவேண்டும் என்றும் பிராத்தனைகள் பண்ணிக் கொண்டுள்ளனர்.
சீரியல்நடிகை மற்றும் வெள்ளித் திரையில் நடித்து வரும் லதா ராவ் அவருக்காக உருக்கமாக இணைய தளத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.
இவர் பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து இருந்தாலும் சீரியல்களில் இவரது ஆரம்பக் கட்ட வாழ்க்கை வெற்றிகரமாக போய்க்கொண்டிருந்தது. சீரியல்களில் இவர் வில்லியாகவும் கதாநாயகியாகவும் கலக்கி இருக்கிறார்.
மச்சானுடன் மொரீஷியஸில்.. குஷ்புவின் மலரும் நினைவுகள்.. கண் வலியை மறந்த ரசிகர்கள்!
காதலித்து கல்யாணம்
இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் இவர் கூட நடித்துக்கொண்டிருந்த ராஜ்கமல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணமாக இருந்தாலும் பெரியோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றது. இவர்களின் காதலுக்கு அடையாளமாக இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சீரியல்களில் ஒன்றாக நடித்து பின்பு திருமணம் செய்துகொண்டு ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஒருமித்த மன நிலை
சிலர் காதலித்து திருமணம் செய்தாலும் கொஞ்ச நாட்களிலேயே பிரிந்து விடுவது புரிதல் இல்லாததே காரணம் மட்டும்தான் என்று கூறியிருக்கிறார்கள். .அது மட்டுமல்லாமல் வேலை செய்யும் இடத்தில் இருக்கும் மனநிலையை அப்படியே வீட்டிற்குள் கொண்டு வரக்கூடாது. அது செருப்பை கழற்றி வைப்பது போல வீட்டிற்கு வெளியே கழட்டி விட்டு வந்துவிட வேண்டும். அங்கிருக்கிற கஷ்டத்தையும் டென்ஷனையும் வீட்டிற்குள் காட்டவே கூடாது என்று கூறியிருக்கிறார்.
வீட்டில் ஜாலி
சீரியல்களில் வில்லியாக நடித்தாலும் நிஜத்தில் கூலாக இருப்பதால்தான் இவரது குடும்பம் இன்று வரையிலும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் போய்க்கொண்டிருக்கிறது . சில வருடங்களாகவே சீரியலை விட்டு இவர் விலகி சினிமாக்களில் நடிக்க தொடங்கி இருந்தனர். இந்த நிலையில் சினிமாவில் பிசியாக இருந்தாலும் இணையதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்கள்.
தில்லாலங்கடியில் ஜாலி ரோல்
ரொம்ப நாள்களுக்கு பிறகு தில்லாலங்கடி படத்தில் வடிவேலுவின் ஜோடியாக நடித்திருந்தார் .அதன் பிறகும் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது இணையதளங்களில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் அது இப்போது வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை விரைவில் குணமடைந்து நலமோடு மருத்துவமனையை விட்டு வெளியே வரவேண்டும் என்று கூறியிருந்தார்.
எஸ்பிபி குணமடைய வேண்டும்
நம் மனம் மகிழ பாடினார் இன்று நம் மனம் உருக அவர் நலம் பெற பிரார்த்திப்போம் என்று போஸ்ட் போட்டிருக்கிறார். இதற்கு பல ரசிகர்களும் அவருக்கு ஆறுதலையும் பாடகர் நலம் பெற வேண்டும் என்றும் கமெண்ட் போட்டிருக்கிறார்கள். இவர் மட்டுமல்லாமல் இன்னும் பல சின்னத்திரை நட்சத்திரங்களும் கூட எஸ்பிபியின் தீவிர ரசிகர்கள்தான். அவர்களும் கூட எஸ்பிபி விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் என்று கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.