பேய் என்றால் மூட நம்பிக்கை என்பதை மக்களே உடைச்சு எரிஞ்சுட்டாங்க.. ராகவா லாரன்ஸ்
Recommended Video
சென்னை:இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு,தொலைக் காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளா ஏதாவது ஒளிபரப்பிக்கிட்டு இருக்காங்க.
சன் தொலைக்காட்சியில் காஞ்சனா 3 திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்த்தை நிகழ்ச்சியாக கொண்டாடினாங்க.
நிகழ்ச்சியில் காஞ்சனா படத்தில் நடிச்ச நட்சத்திரங்கள் கலந்துக்கிட்டாங்க.அப்போது பேசிய படத்தின் இயக்குனர் லாரன்ஸ் பேசுகையில்,
நான் கோவை சரளா அக்கா,ஸ்ரீமன் இவங்களைப் பார்க்கறதுக்கு முன்னால ஒரு டயலாக் எழுதி வச்சிருப்பேன். ஆனா,அவங்க செட்டுக்கு வந்து ,அவங்களைப் பார்த்த உடனே உடனே வேற டயலாக் எழுதுவேன்.
அவங்க முகத்தைப் பார்த்தா இவங்க இப்படிப் பேசினா நல்லாருக்குமேன்னு தோணும்னு சொன்னார்.
முதலில் பேய் படம்னாலே பயந்துகிட்டு பார்க்கமாட்டாங்க.இப்போ குடும்பமா சேர்ந்து இது மாதிரி படங்களை பார்க்கறாங்க எதனால இந்த மாற்றம்னு நினைக்கறீங்கன்னு கேட்டபோது,
பேய்ன்றது ஒரு மூட நம்பிக்கைன்னு மக்களே உடைச்சு எரிஞ்சு,பேய்ப் படம்னா காமெடி படம்னு ஆசையா வந்து பார்க்கறாங்கன்னு சொன்னார்.