பொண்ணுங்களை படிக்க விடுங்கடா...தாலியோட எதுக்கு...?
சென்னை: சன் டிவியின் தமிழ்செல்வி சீரியலில் தமிழ்செல்வி காலேஜுக்கு போவதற்கு முன்னால் தன்னை கல்யாணம் செய்துகொண்டுதான் போக வேண்டும் என்று தாலியை கையில் வைத்து மிரட்டுகிறான் முறை மாமன் சரவணன்.
மாவட்டத்தில் முதல் மார்க் வாங்கிய தமிழ்செல்வி தனக்கு முறைமாமன் சரவணனனுடன் நடக்க இருந்த கல்யாணத்தைபுத்திசாலித்த தனமாக நிறுத்தி, கோயமுத்தூர் காலேஜில் சேரப் போகும் சமயத்தில் சரவணன் தன் கையால தாலி கட்டிக்கொள்ள கோயிலுக்கு கூப்பிடறான்.
தமிழ்செல்வி கண்ணீருடன் பேசமுடியாமல் நிற்கிறாள். படித்து கலெக்டராக வேண்டும் என்று ஆசையில் இருக்கும் தமிழ்செல்வி,படிச்சுட்டு உன்னையே கல்யாணம் செய்துக்கறேன் மாமான்னு சொல்லியும் இப்படி மாமன்காரன் மிரட்டினால் என்ன செய்வாள் பாவம்!
அட... நடிகை இனியாவின் தங்கச்சியா இவர்... சாரக் காத்து வீசும்போது!
ஒரு வழியா கல்யாணம்
முறை மாமனுடன் நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி பெரியப்பாவிடம் படிக்க சம்மதமும் வாங்கிவிட்டாள் தமிழ்செல்வி. ஆனால், முறை மாமன் சரவணன், நமக்கு ரெண்டு முகூர்த்தம் குறிச்சு குடுத்தாங்க... அதுல ஒரு முகூர்த்தம் முடிஞ்சுருச்சு.
வேற முகூர்த்தம்
இன்னொரு முகூர்த்தம் இன்று.. அதானால் நான் அரச மரத்தடி பிள்ளையார் கோயிலில் தாலியோட இருப்பேன். நீ காலேஜ் போறத்துக்கு முன்னால வந்துரு. கல்யாணம் பண்ணிக்கிட்டு, அப்புறமா நீ போகலாம்னு சொல்றான். தமிழ்செல்வி தயங்க... நீ வரலே.. நான் விஷத்தை குடிச்சுட்டு ஆத்துல விழுந்துருவேன்னு சொல்றான்.
போன் தமிழ்செல்விக்கு
காலேஜுக்கு கிளம்பிக் கொண்டு இருந்த தமிழ்செல்விக்கு போன் வருது. என்ன மாமான்னு கேட்க, கிளம்பிட்டியான்னு கேட்கறான் சரவணன்.. கோயிலுக்குத்தானே என்று கேட்க... இல்லை மாமா காலேஜுக்குன்னு சொல்றா.
தாலியோட நான்
நான் கோயிலில் தாலியோட காத்து இருக்கேன்.. நீ காலேஜுக்கு கிளம்புறியா... நான் சாகப்போறேன்... பரவால்லியான்னு கேட்கறான், மாமான்னு தமிழ்செல்வி இழுக்க... உடனே கோயிலுக்கு கிளம்பி வான்னு கூப்பிடறான் சரவணன். தமிழ்செல்வி கண் கலங்கி நிக்கறா.
படிக்க ஆசைப்படற பொண்ணுங்களை படிக்க விடுங்களேண்டா... எதுக்கு தாலியை வச்சுக்கிட்டு பயமுறுத்தறீங்க....