Pandian Stors Serial: இது கொஞ்சம் கஷ்டமான வேலைதான்... பாராட்டலாம்!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை சாஃப்டான கதை. ஒரு சண்டை இல்லாமல், வம்பு இல்லாமல் கதையை கொண்டு போக வேண்டும்.
ஆனால், பார்வையாளர்களுக்கு எமோஷன் வரவழைக்க வேண்டும்.அவர்களை ரசித்து பார்க்க வைக்க வேண்டும். இது கஷ்டமான வேலைதான்.
இதில் வெற்றி கண்டு ஜெயித்து இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குநரை பாராட்டலாம்.
தினப்படி நிகவுகள்
ஒரு கூட்டு குடும்பமாக அன்றாடம் நடக்கும் ன் நிகழ்வுகளை படம்பிடிப்பது எனும்போது, சிலருக்கு சலிப்பு தட்டிவிடும். இதை எப்படி படம்பிடித்து என்று போரடித்து கூட விடும். ஆனால், இதை ஒரு சவாலாக எடுத்து, போரடிக்காமல், அதே சமயம் பார்ப்பவர்களுக்கு எமோஷனல் வரும் விதமாக சூட் செய்து இருப்பது பாராட்டுக்கு உரியதுதான்.
Roja Serial: இன்னுமா அணுவை செண்பகம் பொண்ணு இல்லைன்னு நிரூபிக்க முடியலை?
சூப்பர் ஹிட்
குடும்ப சீரியலாக ஒரு திகில் காட்சி இல்லாமல், அண்ணன் தம்பி பாச காட்சிகள், மருமகள்கள் ஒற்றுமையாக குடும்பம் நடத்தும் காட்சிகள் மட்டுமே மெகா சீரியல் என்றால் ஒருவர் கதை பண்ணுவது என்பது அவருக்கே கொட்டாவி வரவழைத்துவிடும். இங்கு இதை மட்டுமே வைத்து இவர் சக்ஸஸ் கண்டு இருக்கிறார்.
ஒவ்வொருவரும் தனித்தனி
தனம் கதாபாத்திரம் முழுக்க எமோஷனல் நிறைந்ததாக.. மீனா கதாபாத்திரம் எதிலும் முழு திருப்தி அடையாதவள் என்று காண்பித்தாலும், அதையும் அந்த குடும்பம் அட்ஜஸ்ட் செய்து போவது என்பது..முல்லை தனது கிராமத்து பாஷையில் வெள்ளந்தியாய் பேசுவது.. அவ்வப்போது வெடுக்கென்று பேசுவது என்று இருப்பது..இப்படி ஒவ்வொருவரும் தனித்தனி கேரக்டர்.
அங்கங்கு எமோஷனல்
இப்படிப்பட்ட குடும்பத்தில்எமோஷனல் அவ்வப்போது அங்கங்கு இழையோடி விளையாடுவது மட்டுமே கதைக்கு சிறப்பம்சமாக இருக்கிறது. இதை மட்டுமே நம்பி இயக்குநர் களம் இறங்கி ஜெயித்து இருக்கிறார்.இது கொஞ்சம் கஷ்டமான வேலைதான்.. பாராட்டலாம்!