ஒன் உமன் ஆர்மியா ரோஜா கலக்கறாளே... ஸ்..அப்பா உலக மகா வில்லி!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் சூர்யாவின் தங்கச்சி ரோஜா சரியான நடிப்புங்க. ராஜாவின் மேலான காதல் இவளை இப்படி ஆட்டிப் படைக்குது.
முதலில் ராஜா பாண்டிச்சேரி ரெசார்ட்ல தன்னை கெடுத்துட்டான்னு நாடகம் ஆடினப்போ, சும்மா தனி ஒரு பெண்ணா இருந்து மொத்த பேரும் அசந்து தன்னை பார்க்கும்படி நடிச்சிருந்தார் ரோஜா.
ராஜா தன்னை கெடுத்ததா ரோஜா சொன்னது பொய்னு நிரூபிச்சப்போ...செய்வதறியாது நின்னு, கடைசியா தனக்காக பரிதாபப்படும்படி தன்னை கட்டிக்க ராஜாவிடம் சமாதானம் பேசினப்பவும் செம நடிப்பு.
நாடுவானில் தள்ளாடிய சிங்கப்பூர் விமானம்.. டெல்லியில் அவசரமாக தரையிறக்கம் .. 228 பயணிகள் தப்பினர்
அவ்ளோதான்
சரி..இனி இவ கதை அவ்ளோதான்னு நினைச்சப்போ... புது அவதாரம் எடுத்து தன் வீட்டிலேயே ஒளிஞ்சு இருந்து சாப்பிட்டுக்கிட்டு அக்காவை மிரட்டினது...
விஷம் கலந்து
அக்கா சூர்யாவை ராஜாவுக்கு கட்டி வைக்கப் போறாங்கன்னு தெரிஞ்சு,ராஜாவின் குருவான வயசானவருக்கும், ராஜாவுக்கும் மட்டும் சாம்பாரில் விஷம் கலந்து வச்சுட்டு போனது...
பிளான்
ஒரு கட்டத்தில் ராஜாவுக்கு சூர்யாவைத் தரவே மாட்டேன்னு அப்பா சுந்தர்ராஜனை முடிவெடுக்க வச்சதுன்னு பிளான் அத்தனையும் அசத்தல்.
அசத்தல் ரோஜா
கோபியின் தங்கச்சி கல்யாண வீட்டுக்கு வந்து ஹாய் டாட்..னு சொல்லி அப்பாவை பதற்றத்துக்கு உள்ளாக்கறது...கூமுட்டை...மங்குனின்னு திட்டி, அடுக்கடுக்கா வசனம் பேசி கல்யாண வீட்டையே கலகலக்க வச்சதுன்னு அசத்தறார் ரோஜா.
கோபி மஞ்சூரியனை
சூர்யா கோபி எங்கடின்னு கேட்க..சுற்றும் முற்றும் தேடறா ரோஜா.என்னடி தேடற..நான் கேட்டது கோபி எங்கேன்னு என்று சூர்யா சொல்ல..மங்குனி அதைத்தாண்டி தேடிகிட்டு இருக்கேன்னு.. இந்தா கோபின்னு கோபி மஞ்சூரியனை எடுத்து தர்றா...
சாப்பிடற இடத்துல
ஏய்..நான்கேட்டது கோபியைன்னு சூர்யா அதட்ட.. ஓ அப்படியா... சாப்பிடற இடத்துல வந்து கோபி கோபின்னு கேட்டா கோபி மஞ்சூரியனைத்தான் கேட்கறியோன்னு நினைச்சேன்..
வசனங்கள்
கூமுட்டை..நானே நாடோடி மாதிரி திரிஞ்சுக்கிட்டு இருக்கேன்..நான் ஏன்டி கோபியை ஒளிச்சு வைக்க போறேன்னு சொல்றா..இப்படி எத்தனையோ வசனங்கள்..சும்மா தடால் தடால்னு அசத்தறா ரோஜா.