Naam Iruvar Namakku Iruvar: இதெல்லாமா ஆடியன்ஸ் கேட்கறாய்ங்க?
சென்னை: ஏங்க உங்க டாடி எந்த ரூமில் தங்கி இருந்தாப்டி.. சொல்லுங்க..டவுட்டு கிளியர் பண்ணுங்க.. எனக்கு இல்லை.. ஆடியன்ஸ் கேட்கறாய்ங்க என்று தேவியிடம் கேட்கிறான் மாயன்.
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தேவியின் அப்பாவுக்கு ரெண்டு சம்சாரம். வீடு பத்தலை என்று பெரிய வீட்டுக்கு வந்த நேரத்தில் ரெண்டாவது சம்சாரமும் வந்து தங்கிட..
ரெண்டு சம்சாரத்துக்கும் பக்கத்து பக்கத்தில் ரூம் போட்டு குடுத்துட்ட சந்தன பாண்டியன் எந்த ரூமில் தங்கி இருந்திருப்பார் என்பதுதான் மாயனின் சந்தேகம்.
சான்டில் பாண்டியன்
தேவியின் அப்பா சந்தன பாண்டியன். அவருக்கு மாயன் வைத்து இருக்கும் பெயர் சான்டில் பாண்டியன் என்பது. சான்டில் பாண்டியனுக்கு இரண்டு சம்சாரம்.. முதல் சம்சாரத்தின் பெண் தேவியை மாயனும், இரண்டாவது சம்சாரத்தின் பெண் தாமரையை மாயனின் தம்பி டாக்டர் அரவிந்தும் கல்யாணம் செய்து இருக்கிறார்கள்.
பெரிய வீடு
இப்போது இருக்கும் வீடு பத்தலை.. ஆளாளுக்கு ரூம் போதலை என்று பெரிய வீட்டை பார்த்து குடி போறார் சந்தன பாண்டியன். அப்போது வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் மாயனும் இந்த வீட்டுக்கு வந்து விடுகிறான். அப்போது பார்த்து தாமரை அரவிந்தும் வந்துவிட, தாமரையின் அம்மா சந்தன பாண்டியனின் இரண்டாவது சம்சாரமும் வந்துடறாங்க.
ஹேண்டில் பாண்டியனா
மாயன் தம்பி அரவிந்த் கிட்டே சொல்றான்.. தம்பி சான்டில் பாண்டியனை என்னவோன்னு நினைச்சேன்..இப்போ பாரு புது வீடு புது பொண்டாட்டின்னு கலக்கறாரு.. ரெண்டு பேரையும் வச்சுக்கிட்டு எப்படி சமாளிக்க போறாரு...இவர் சான்டில் பாண்டியன் இல்லடா தம்பி ஹேண்டில் பாண்டியன்னு நக்கல் அடிக்கறான்.
ஆடியன்ஸ் கேட்கறாய்ங்க
விடிந்தவுடன் பேப்பர் படித்துக்கொண்டு தேவி உட்கார்ந்து இருக்க...ஏங்க.. ரெண்டு பேரையும் அங்கிட்டு ரூமில் ஒருத்தரை இங்கிட்டு ரூமில் ஒருத்தரை தங்க வச்சாப்படியே உங்க டாடி...அவரு எந்த ரூமில் தங்கி இருந்தாப்டி என்று மாயன் கேட்க, தேவிக்கு கோபம் வந்து டேய். மரியாதையா போயிருன்னு சொல்றா...டவுட்டுங்க... ஆடியன்ஸ் கேட்கறாய்ங்க என்று சொல்கிறான் மாயன்.. இதெல்லாமா ஆடியன்ஸ் கேட்கறாய்ங்க?