Magarasi Serial: ஐ... மகராசி சீரியலில் பிரியமானவள் அழகு அம்மா!
சென்னை: சன் டிவியில் மகராசி என்று ஒரு புத்தம் புது சீரியல் இந்த மாதம் 21ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
இன்னும் நேரம் அறிவிக்கவில்லை என்பதால், எந்த நேரத்துக்கு ஒளிபரப்பாகும் சீரியல் எது முடிந்து இந்த தொடர் ஆரம்பிக்கப் போகிறது என்று தெரியவில்லை.
நாயகி சீரியல் முடியும் தருவாயில் பயணிப்பதாக சீரியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். என்றாலும் எப்போது ஒளிபரப்பாகும் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
அம்மா பிரியமானவள்
பிரியமானவன் சீரியலில் அம்மாவாக நடித்த அம்மா நடிகை இந்த சீரியலிலும் அம்மாவாக நடிக்கிறார். எனவே, பிரியமானவள் சீரியலை இவருக்காக ரசித்துப் பார்த்த மக்கள் மகராசி சீரியலிலும் இவரை பார்க்க வெகு ஆர்வமாக உள்ளனர்.
சீரியல் நாயகி
என்னதான் நாயகி சீரியல் முடிந்துவிடுமோ என்று நினைக்கும் அளவுக்கு கடைசிக் கட்டத்தில் சீரியல் பயணிப்பதாக தோன்றினாலும், முடிந்து விடும் என்று சொல்ல முடியவில்லை. இன்னும்கூட சன் டிவி சீரியல்களில் ரேட்டிங் நம்பர் ஒன்னில்தான் இருக்கிறது.
வழக்கமான சீரியல்
எப்போதும் போல அழுகை, கோபம், ஆத்திரம் ,கொலை, கொள்ளை.அடுத்தவர் குடியைக் கெடுப்பது, வயிற்றிலிருக்கும் கருவை அழிக்க கங்கணம் கட்டிக்கிட்டு திரியறது, வீட்டுக்கு வந்த மருமகளை ஆரத்தி எடுக்கும்போதே உன்னை இந்த வீட்டை விட்டு துரத்துவேன் என்று சபதம் எடுப்பது என்று கதை இல்லாமல் இருந்தால் பார்க்கறவங்க குடும்பம் நல்லா இருக்கும்.
சன் டிவி சீரியல்
மகராசி சீரியல், அவங்க வீட்டு மருமகள் என்று நினைத்து வேறு ஒரு பெண்ணை மருமகளாக வரவேற்கும் காட்சி ப்ரோமோவாக வெளியாகி வருகிறது. இந்த குடும்பத்துக்கு நான் மருமகள் இல்லை இதை நான் இவர்களிடம் எப்படி சொல்வேன் என்று நாயகி புலம்பும் காட்சியும் ப்ரோமோவில் இருக்கிறது.