கல்பனா முறைக்க.. மகாவும் அக்னிப் பார்வை பார்க்க.. கடைசியில் கலகல.. ஹய்யோ ஹய்யோ!
சென்னை: சன் டிவியின் ரோஜா,லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் சேர்ந்து மெகா சங்ககம் என்று ஒளிபரப்பாகிட்டு வருது.
ஊர்க்காரங்க இந்த ரெண்டு குடும்பத்தையும் திருவிழாவுக்கு அழைக்க ரெண்டு வீட்டு மருமகள்களான கல்பனா, மகாலட்சுமி இவங்க ரெண்டு பேரின் உதவியைத்தான் முதலில் கேட்டு இருக்காங்க.
இவங்க ரெண்டு பேரும் சமாதானம் செய்துதான் கடைசியில் ரெண்டு குடும்பத்து பெரியவங்களும் திருவிழாவுக்கு வர சம்மதிச்சு இருக்காங்க.
பாரதி இந்த மாதிரி டிசைனே இல்லம்மா... எல்லாத்துக்கும் டைம் கேட்கறான்....!
பூர்ண கும்பம்
பூசாரி ரெண்டு வீட்டு மருமகள்களையும் கூப்பிட்டு, உங்களாலதாம்மா இந்த திருவிழா சாத்தியமாச்சு. இந்த பூர்ண கும்ப முதல் மரியாதையை ரெண்டு பேரும் சேர்ந்து வாங்கிக்கோங்கன்னு சொல்றார்.
அன்னபூரணி அம்மா
பூர்ண கும்பத்தை மகாலட்சுமியும் கல்பனாவும் சேர்ந்து வாங்கிக்கறாங்க. அதுக்கு முன்னாடி ஒரு குட்டி சீன் வச்சாங்க பாருங்க.. அது சூப்பர். அதாவது மகாவும், கல்பனாவும் நேருக்கு நேர் கோபப் பார்வை பார்த்தபடி வந்தனர். ஆஹா சண்டை வரப் போகுது போலயேன்னா நினைச்சா.. பக்கத்துல வந்ததும் கலகலவென சிரிச்சு ஜாலியாக்கிட்டாங்க.
அன்பான பேச்சு
நம்ம ரெண்டு குடும்பமும் பார்த்துக்கிட்டு எத்தனை வருஷம் ஆச்சு மகான்னு கல்பனா சொல்ல, இனியாவது வருஷா வருஷம் திருவிழாவுல சந்திக்க ஏற்பாடு செய்வோம்னு சொல்றாங்க மகாலட்சுமி. அன்னபூரணி அம்மா கோபம் இன்னும் தனியவே இல்லைன்னு மகாலட்சுமி சொல்றாங்க. மருமகள்களாச்சே,, குடும்பப் பாசம் இருக்காதா பின்னே.
உங்க வீட்டுக்கு
பூர்ண கும்பத்தை உங்க வீட்டுக்கு எடுத்துட்டு போங்க மகான்னு கல்பனா சொல்ல, இல்லை உங்க வீட்டுக்கு எடுத்துட்டு போங்க கல்பனா.. அன்னபூரணி அம்மா சந்தோஷப் படுவாங்கனு மகாலட்சுமி சொல்றாங்க. ஆமாம்... ரொம்ப தேங்க்ஸ் மகான்னு சொல்றாங்க கல்பனா.
ஐயா
மகா மகாலிங்கம் ஐயா மேல தப்பு இல்லைன்னு தெரிஞ்சுதா..யார் அதை செய்தாங்கன்னு தெரிஞ்சுதான்னு கல்பனா கேட்க..இன்னும் இல்லை கல்பனா...இந்த திருவிழா முடியறதுக்குள்ள அந்த உண்மை தெரிஞ்சுரும்னு அந்த அம்மனை நான் நம்பறேன்னு சொல்றாங்க மகாலட்சுமி.
இவங்க ரெண்டு பேரும் பேசிக்கறதை மறைஞ்சு நின்னு கேட்கறான் ஒருத்தன்...அவன்கிட்டதான் விஷயம் இருக்கு.