Maharasi Serial: ஃபிளாஷ் பேக்கில் ஹரித்துவார் அழகை காண முடியுமா?
சென்னை: சன் டிவியின் மகராசி சீரியலில் இப்போதுதான் ஹரித்துவாரில் பிறந்து வளர்ந்த பாரதியின் ஃபிளாஷ் பேக் பற்றி சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஃபிளாஷ் பேக்கிலாவது ஹரித்துவார் அழகை காண முடியுமா என்கிற ஆசை சீரியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தியாவின் வட மாநிலத்தில் ஹரித்துவார் சிவன் ஸ்தலங்களில் மிகவும் புகழ் வாய்ந்தது. கங்கை நதி பாயும் இந்த ஊரில் நதியின் நடுவில் மிகப் பிரமாண்டமான சிவன் சிலை காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும்.
தமிழ் பாரதி
பாரதி தமிழையும் குழந்தையையும் காப்பாற்றிய நிலையில் தனது சொந்த ஊரான சிதம்பரத்துக்கு போக நினைக்கிறான். எங்கு போவது என்று தெரியாமல் விழித்த பாரதியும் தமிழுடன் சிதம்பரம் வந்துவிடுகிறாள். தமிழுடன் பாரதி வருவதை பார்த்த தமிழின் குடும்பம் பாரதியைத்தான் தமிழின் மனைவி என்று கொண்டாட ஆரம்பித்து விடுகிறது.
தமிழின் மனைவி
தமிழின் மனைவி தங்களுக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில், அவனது வருமானம் தனது ஆடம்பர வாழ்க்கைக்கு போதவில்லை என்று அவனை விட்டு பிரிய நினைக்கிறாள். குழந்தையை அவனிடம் விட்டுவிட்டு பிரிந்தும் விடுகிறாள். தமிழ் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று ஹரித்துவாரில் இருந்து ரயிலில் புறப்படுகிறான்.
கை கொடுக்கிறான் பாரதிக்கு
அப்போது ரவுடிகளால் துரத்தப்பட்டுத்தான் பாரதி ஓடி வருகிறாள் என்பதை அறியாத தமிழ், ஒடி வரும் அவளுக்கு புறப்பட்ட ரயிலில் ஏற கை கொடுக்கிறான். அப்போது ரயிலில் விழுந்து தற்கொலை செய்ய இருந்த தமிழை காப்பாற்றுகிறாள் பாரதி.
பாரதி காப்பாற்றிய
பாரதி தமிழையும் குழந்தையையும் காப்பாற்றிய நிலையில் தனது சொந்த ஊரான சிதம்பரத்துக்கு போக நினைக்கிறான். எங்கு போவது என்று தெரியாமல் விழித்த பாரதியும் தமிழுடன் சிதம்பரம் வந்துவிடுகிறாள். தமிழுடன் பாரதி வருவதை பார்த்த தமிழின் குடும்பம் பாரதியைத்தான் தமிழின் மனைவி என்று கொண்டாட ஆரம்பித்து விடுகிறது.
ஃபிளாஷ் பேக்
இந்த நிலையில்தான் தமிழிடம் பாரதி தனது ஃபிளாஷ் பேக்கை கூற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஹரித்துவாரில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண் நான் என்று கூற ஆரம்பிக்கிறாள். பார்க்கலாம்.. ஹரிதுவாரை எந்த அளவுக்கு நமது பார்வைக்கு காண்பிக்கிறார்கள் என்று.