Malar serial: போலீஸ்காரன் பொண்டாட்டி பயப்படறதா?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியலில் கதிரும் மலரும் இன்னும் எதிரும் புதிருமாகத்தான் இருக்கிறார்கள். ஆசைப்பட்டு கதிர் மலரை கல்யாணம் செய்துகொண்டான்.
மலருக்கும் கதிரைப் பிடிக்கும் என்றாலும் சிக்கல், கதிர் காவல் துறை உதவி ஆணையராக இருப்பதுதான். இதில் என்ன பிரச்சனை என்று கேட்டால், மலர் தற்காப்புக்கு ஒரு கொலை செய்து விடுகிறாள்.
அவள் விதி பாருங்கள், இவள் செய்த கொலையை விசாரிக்கும் பொறுப்பு கதிருக்கு வந்து சேருகிறது. இந்த பயத்திலேயே மலர் இருக்க, கதிர் மலரைப் பற்றி என்னதான் புரிந்துகொண்டோம் என்று தெரியாமல் தவிக்கிறான்.
பூஜாவைப் பார்த்து
மலர் நீ ஏன் தெரியுமா பூஜாவுக்கு கல்யாணம் செய்துடணும்னு துடிக்கறே..பூஜாவுக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னா நீ சேஃ ப்.. அதனாலதான்.. என் அத்தை பொண்ணு பூஜாவைப் பார்த்தால் உனக்கு பயம்னு சொல்றான். அதற்கு மலர், ஒரு பூஜா இல்லை ஆயிரம் பூஜா வந்தாலும் எனக்கு ஒண்ணும் பயமில்லை. பேசாமல் படுத்து தூங்குங்க என்கிறாள்.
காவல்துறை உதவி
கதிர் காவல்துறை உதவி ஆணையர் என்பதால், மலர் செய்த கொலையை தெரிஞ்ச .மொட்டைத் தலையன் ஒருவன் அவளை பயமுறுத்தி பயமுறுத்தி தனது காரியத்தை சாதிச்சுக்கறான். இதனால், காவல் துறையிடம் இருந்து அவன் அவ்வப்போது தப்பித்துக் கொள்கிறான்.
கதிர் வீட்டில்
முக்கியமான ஒரு விஷயத்தை கதிர் வீட்டிலிருந்து எடுத்து தான் ஆதாயம் அடைஞ்சுக்க, இன்னிக்கு இரவு கதிர் வீட்டிலிருக்க கூடாது ஏதாவது செய்னு மொட்டை போன் பண்றான். இதோ பாரு அவர் வேலைக்கு இனி எந்த தொந்திரவும் தர மாட்டேன்னு நீ பிராமிஸ் பண்ணிய இருக்கேன்னு மலர் சொல்றா.
வேலைக்கு ஆபத்து
வேலைக்கு ஆபத்து வராதுன்னு சொல்றேன்.எனக்கு தேவையானதை எடுத்துக்கிட்டு நான் கிளம்பிருவேன். கதிர் இன்னிக்கு நைட் வீட்டில் இருக்க கூடாது. எங்கியாவது அழைச்சுக்கிட்டு போயிருன்னு சொல்றான். கதிர் மட்டும் இல்லை அவங்க வீட்டில் யாருக்கும் ஆபத்து வர கூடாதுன்னு சொல்றா மலர். நான் யாரையும் எதுவும் செய்ய மாட்டேன்.. கதிர் மட்டும் வீட்டிலிருக்க கூடாது. மத்தவங்களை நான் சமாளிச்சுக்குவேன்னு சொல்றான்.
மலரும் பயந்து பயந்து ஓகே சொல்கிறாள். போலீஸ்காரனை கல்யாணம் செய்துக்கிட்டு இப்படி பயந்து பயந்து வாழறதா?