For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிழக்கு வாசல் இன்ஸ்பெக்டருக்கு கல்யாண ஆசை வந்துருச்சு...!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் இரு வேறு குடும்பத்தினரின் பகையால் ஊர் இரண்டாகும் கதை.

தேவராஜ், நாகப்பன் இருவருக்குள்ளும்தான் பகை. இவர்களுக்கு இடையில் இருக்கும் ஊர் மக்களில் பாதி பேர் தேவராஜ் பக்கமும், பாதி பேர் நாகப்பன் பக்கமுமாக ஊரே ரெண்டு பட்டு கிடக்கிறது.

படகுப் போட்டியில் மூன்று வருஷமாக தேவராஜ் ஏமாத்தி ஜெயிச்சு நாகப்பனுக்கு ஆதரவான மீனவர்களின் வாழ்வாதாரங்களை இழக்க செய்கிறார்.

சவுந்தர்யா மனசை மூடி வைப்பது ஏன்... இந்த காலத்தில் இப்படியுமா....? சவுந்தர்யா மனசை மூடி வைப்பது ஏன்... இந்த காலத்தில் இப்படியுமா....?

நாகப்பன் மகளுக்கு

நாகப்பன் மகளுக்கு

இந்த சமயத்தில்தான் நாகப்பனின் மகள் யாழினியின் கல்யாண கவலை வந்து விடுகிறது. நீ சொல்லுவியே அடிக்கடி...பெண்ணை பெத்தவங்க தலை குனிஞ்சுதான் போகணும்னு.அப்படி என் மனசு துடிச்சுக்கிட்டு இருக்குடி.பொண்ணுக்கு நல்ல இடத்துல கல்யாணம் செய்து வைக்கணும்னு பொண்டாட்டிகிட்ட நாகப்பன் பேசிகிட்டு இருக்கார்.

கோயிலுக்கு தேவராஜ்

கோயிலுக்கு தேவராஜ்

படகுப் போட்டியில் ஜெயிச்சதுக்கு கோயிலுக்கு நேர்த்தி கடன் பாக்கி இருக்குங்க... வாங்க போயிட்டு வந்துடலாம்னு தேவராஜ் மனைவி கூப்பிடறாங்க. இதை கேட்டுகிட்டு இருந்த நாகப்பனின் ஆட்கள் ,கோயிலிலுக்கா போறீங்க...வாங்க வாங்க... உங்களை போட்டு தக்குறோம்னு சொல்லிக்கிறான்.

போலீஸ் இன்ஸ்பெக்டர்

போலீஸ் இன்ஸ்பெக்டர்

கிழக்கு வாசல் போலீசிஸ் இன்ஸ்பெக்டருக்கு திடீர்னு இந்த ஊரில் நடக்கும் வன்முறை ரொம்ப மன உளைச்சலை உண்டாக்கிடுது.. அதனால. கான்ஸ்டபிளிடம் வாழ்க்கை போரடிக்குது... கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்னு சொல்றான்.

கல்யாணம் செய்துக்கவும்

கல்யாணம் செய்துக்கவும்

இங்கு நாகப்பன் தனது மகள் யாழினிக்கு கல்யாணம் செய்து வைக்க நினைக்க, அடுத்து இங்கே இன்ஸ்பெக்டரும் கல்யாணம் செய்துக்கற முடிவு இருக்கார். கணக்கு ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதானே.... இன்ஸ்பெக்டர் யாழினியை கல்யாணம் செய்துக்கவும் வாய்ப்பு இருக்குன்றதைத்தான் இப்படி சொல்றோம்.

கோயிலில் ஆபத்து

கோயிலில் ஆபத்து

குடும்பத்துடன் கோயிலுக்கு வந்திருக்கும் தேவராஜை கொலை செய்ய கத்தியுடன் ஆட்கள் சூழ்ந்து விடுகிறார்கள். தேவராஜ் குடும்பம் தவித்து நிற்கிறது. தேவராஜுக்கு என்ன ஆகுமோ தெரியலை...இது நாகப்பனின் ஆட்கள் அவருக்கே தெரியாமல் செய்யும் வேலை...

English summary
Sun TV's iizhakku vasal serial is the story of two different families.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X