மரப்பாச்சி பொம்மை விளையாட்டு மாதிரி.... கதை!
சென்னை:சன் டிவியின் கண்மணி சீரியல் கல்யாணம் கான்செப்டில் மரப்பாச்சி பொம்மை கல்யாணம் மாதிரி விளையாட்டு கல்யாணமா போயிகிட்டு இருக்குது.
முதலில் சவுந்தர்யாவுக்கும் கண்ணணுக்கும் கல்யாணம்னாங்க.பிறகு சவுந்தர்யாவுக்கும் ஆகாஷுக்கும் கல்யாணம்னு சொன்னாங்க.
அதுக்கப்புறம் கண்ணன் மாமாவை கல்யாணம் செய்துக்கலாம்னு சவுந்தர்யா ஆசைப்பட அதுக்குள்ள சின்னவரு முத்து செல்விக்கு வாக்கு குடுத்துடறார்.
அச்சோ... கல்யாண பத்திரிக்கையில் தீ பத்திக்கிச்சே!
மறுபடியும் இப்போ
இப்போ மறுபடியும் சவுந்தர்யாவை கட்டிக்கணும்னு கண்ணனின் அக்கா விஜய லட்சுமி ஆசைப்பட , கண்ணன் சவுந்தர்யாவையும் ஆகாஷையும் சேர்த்து வச்சுட்டா நம்ம ரூட் கிளியராகிரும். அக்காவின் கோவமும் தீர்ந்திரும்னு ஒரு கணக்கு போட்டு, ஆகாஷ்கிட்ட சவுந்தர்யாவை பேசச்சொல்றான்.
ஓகே மாமா
மாமாகிட்ட ஓகே சொல்லிடறா சவுந்தர்யா, கண்ணன் ஆசையா ஆகாஷை வர சொல்றான். ஆகாஷும் ஆசைஆசையா சவுந்தர்யாவிடம் பேச வர்றான்.
மாமாகிட்ட வெறுக்கறதா
ஆகாஷ் என்னை மன்னிச்சுரு...என் காதலை சொல்ல உன்னை இங்கே வர சொல்லலை. நீ ஆசையாத்தான் வந்திருப்பே..என்னால என் மாமாவை மறக்க முடியாது ஆகாஷ்...முதலில் முத்துசெல்வி கூட மாமாவுக்கு கல்யாணம் நடக்கட்டும் .
வெறுக்கறதா சொல்லு
என்னை வெறுக்கறதா கண்ணன் மாமாகிட்ட நீ பொய் சொல்லு ஆகாஷ்.... இதுதான் நான் உன்கிட்ட கெஞ்சி கேட்டுக்கறது.சாத்தியமா நீ என்னை கல்யாணம் செய்துக்கிட்டு நிம்மதியா இருக்க முடியாது. என்னாலயும் மாமாவை மறக்க முடியாது எனக்காக மாமாகிட்ட என்னை வெறுக்கறதா பொய் சொல்லு ஆகாஷ்னு கெஞ்சறா.
அவனும் ஐ லவ் யூன்னு சொல்லுவேன்னு ஆசையா வந்தா என் வாயாலேயே என்னை வெறுக்கறதா சொல்ல வச்சுட்டேன்னு போறான்...
இப்படி பொம்மை கல்யாணம் மாதிரி இருக்கு கண்மணி சீரியல்.