மாயன் கண் கலங்கினாலும் சும்மா தில்லா நிக்கறானே...!
சென்னை: விஜய் டிவியின் நாமிருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனை இன்னிக்கு கண்கலங்க வச்சுட்டாங்க.
உள்ளேஒரு கலர், வெளியே ஒரு கலர்னு லுங்கி, சட்டையில் ஒரு கூலிங் கிளாஸ், கண்ணுலே ஒரு கூலிங் கிளாஸ்னு ஸ்டைல், கலர் கலரா சட்டைன்னு தில்லா சுத்திகிட்டு இருந்தவன் மாயன்.
இவன் ஹோட்டல் ஆரம்பிக்க பணம் வேணும்னு பேங்குக்கு போறான்.அங்க உங்க கணக்குலயே எட்டு லட்சம் பணமிருக்கேன்னு சொல்றாங்க. சரி மாமா அதான் தேவியோடு அப்பாதான் நம்ம கணக்குல போட்டு இருப்பார்னு அலட்சியமா இருந்துடறான் மாயன்.
கடைசியில இந்த பணம் எப்படி வந்துச்சுன்னு எல்லாரும் நிக்க வச்சு கேட்கும்போது, மாயன் மாமாவைத்தான் சொல்றான். தேவியின் அம்மாவும் மாயனை ஒழிச்சுக்கட்ட பார்க்கறாங்க.
வாவ்.. நிலாவை அவங்க அம்மா பாத்துட்டாங்களே.. ஆனா, நிலாவுக்குத்தான் தெரியல!
இதை தேவி நம்ப மறுக்க, ஒரு பஞ்சாயத்தே நடக்குது. மாமாவை கூப்பிட்டா உண்மை தெரியும்னு தில்லா சொல்றான் மாயன். இவர்களின் சூழ்ச்சி தெரியாமல்.
மாமா வந்து நான் பணம் போடலையே மாப்பிள்ளை..நான்தான் உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன்னு சொன்னேன்.. நீங்கதான் வேணாம்னு சொன்னீங்க... அப்பற்றும் நான் எதுக்கு உங்க கணக்குல போடப் போறேனனு சொல்றார்.
உங்க பொண்டாட்டிதான் மாயனை கொல்ல ஆள் அனுப்பினதுன்னு சொல்றான்னு தேவியின் தம்பி சொல்ல, மாமாவுக்கு கோபம் வந்துருது. மாப்பிள்ளையை கன்னா பின்னான்னு திட்டிடறார்.
மாயன் இவர்கள் சூழ்ச்சி தெரியாமல் என்ன பேசறதுன்னு விக்கிச்சு நிக்கறான். கண்ணு கலங்கி இருந்தாலும் ஆள் சும்மா ஸ்ட்ராங்க நிக்கறான்.
மாயன்னா தில்லுன்னு அர்த்தமாச்சே...சும்மா தில்லா நிக்கறான்.