மேடையில் பாடி அசத்திய மினிஸ்டர் ஜெயக்குமார்!
சென்னை: ஜீ தமிழ் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவுக்கு வருகை தந்து இருந்தார் தமிழக மீன்வளத்துறை மினிஸ்டர் ஜெயக்குமார். இந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
ஜீ தமிழ் டிவி கடந்த சில வருடங்களாக தங்களது குடும்ப விருதுகள் வழங்கும் விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறது.
இந்த முறை இந்த கொண்டாட்டத்தில் மினிஸ்டர் ஜெயக்குமார் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கார். அத்துடன் இரண்டு வரிகள் பாடலும் பாடி அசத்தி இருக்கார்.
வந்தாலும் வரவேற்பு
எத்தனை சேனல்கள் வந்தாலும், அத்தனையிலும் சீரியல்கள் ஒளிபரப்பினாலும் மக்களிடம் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. அதே போல எத்தனை விதம் விதமான நிகழ்ச்சிகள் என்றாலும் ஒரே மாதிரி நிகழ்ச்சிகள் வெவ்வேறு ஆட்களால் நடத்தப்படுகிறது என்றாலும் அதற்கென்று மக்கள் கூட்டம் இருந்து ரசிக்கத்தான் செய்கிறார்கள்.
ஜீ தமிழ் டிவி
இப்படி ஆரம்பித்த ஜீ தமிழ் டிவி ஆரம்பித்த வேகத்தில் மற்ற சேனல்களோடு பந்தயத்தில் கலந்துகொண்டு ஓட்டத்தைத் துவங்கிய வேகத்தில் வெற்றியும் கண்டு வருகிறது. சன், விஜய் டிவிக்கு எப்படி சீரியல்கள் கைக்கொடுத்து வருகிறதோ அதே மாதிரி ஜீ தமிழ் டிவிக்கும் சீரியல்கள் கைக் கொடுத்து வருகின்றன.
கேம் ஷோக்கள்
ரியாலிட்டி கேம் ஷோக்கள், டாக் ஷோக்கள், சரிகமப சங்கீத நிகழ்ச்சி என்று எதற்கும் தங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்த ஜீ தமிழ் டிவி, இந்த வருடமும் ஜீ தமிழ் டிவியின் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவை மிக நிறைவாக கொண்டாடி முடித்து இருக்கிறது.
|
ஜெயக்குமார் மினிஸ்டர்
மினிஸ்டர் ஜெயக்குமார் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவரை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க மேடைக்கு அழைத்தனர்.அந்த விருதை பெற்ற நடிகை வடிவுக்கரசி.ஜெயகுமாரிடம் ஒரு பாடல் பாட சொல்லி கேட்டபோது பூங்காற்று திரும்புமா பாடலை இரண்டு வரிகள் பாடி அசத்தினார்.
இந்த நிகழ்ச்சியை வரும் சனி அன்று மாலை 5 மணிக்கு பார்த்து மகிழுங்கள்