உதடு விரிச்சு.. மெல்ல சிரிச்சு.. உருக்கி எடுக்கும் மோனிஷா!
சென்னை: வாய்ப்பு இல்லை என்பதற்காக இந்த அளவிற்கு இறங்கிவிட்டார் அரண்மனைக்கிளி மோனிஷா என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
அந்த அளவிற்கு திடீரென்று இவர் கவர்ச்சி புயலாக மாறி ரசிகர்களை பாடாய் படுத்தி எடுத்து வருகிறாராம். இவருடைய போட்டோஸ்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
அது ஒரு நாள் தவறாமல் இவர் போடும் போஸ்ட்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் இவரை மொய்த்து வருகிறது.
தீயாக மாறிய ஜானு
அரண்மனைக்கிளி சீரியல் ஜானு வாக அமைதியும் சொரூபமாக இருந்த இவரே இப்போது காட்டுத்தீ போல பத்திக்கொண்டு எரிந்துக் கொண்டிருக்கிறார் .இவரை பார்த்ததும் பலர் மூச்சு விடுவதற்கே சிரமப்படுகிறார்கள். அந்த அளவிற்கு சூடேற்றி இருக்கிறார் .இவர் கேரளா பெண்களின் வசீகரத்தை கண்களாலேயே காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறாராம் .
செம சூடு
போட்டோவை பார்த்து பலர் உச்சுக் கொட்டி ரசித்து வருகிறார்கள் .கேரளா தான் குளுமை என்று ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் .தற்போது இவர் ஒரு போட்டோவை பார்த்து கேரளாவை விடவும் நீங்கள்தான் ரொம்ப குளுமையாகவும் செழுமையாகவும் இருக்கிறீர்கள் என்று கொஞ்சி வருகிறார்கள். இவருக்கு கூடுதல் அழகு இவரது நீண்ட தலைமுடி தான் இந்த தலைமுடிக்கான ரகசியம் என்னவென்று தான் பல ரசிகர்களும் கேட்டு வருகிறார்கள்.
அம்மா தந்த கிப்ட்
ஆனால் அதற்கு அவர் சிரித்துக்கொண்டே இது எனது அம்மா விடமிருந்து வந்தது என்று கூறியிருக்கிறார். ஆனாலும் அந்த அழகான தலை முடியை விரித்து விட்டு மாராப்பு சேலையோடு ஒரு போட்டோ சூட்டை நடத்தி இருக்கிறார் இந்த போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் எப்படி வர்ணிப்பது என்றே தெரியாமல் குழம்பி வருகிறார்களாம்.
தமிழ் ரசிகர்களைப் பிடிக்கும்
இவருக்கு எப்போதுமே தமிழ் ரசிகர்களை ரொம்பவே பிடிக்குமாம். ஏனென்றால் வந்த முதல் சீரியலில் அவருக்கு இந்த அளவிற்கு பாசத்தையும் ஆதரவையும் அவர்கள் தான் கொடுத்து இருக்கிறார்கள். அதனால் மீண்டும் தமிழ் சீரியலில் நடிக்க வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தமிழில் அழகாக பேசி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்து இருக்கிறார்.
சூப்பரா பேசறீங்களே
இந்த அளவிற்கு தமிழ் அழகாக பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை யாம். இப்ப இருக்கிற பல தமிழ் கதாநாயகிகள் கூட தமிழில் பேசாமல் பிற மொழிகளில் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் எந்த ஒரு நிகழ்ச்சியில் பேட்டி எடுக்கும் போதும் பேட்டி கொடுக்கும் போதும் அழகாக தமிழில் தான் பேசிக் கொண்டிருக்கிறாராம். இதை பார்த்து ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகிறார்கள்.
சூப்பர் ஆக்டிவ்
என்ன இருந்தாலும் இவர் இப்போது கொஞ்ச நாட்களாகவே இந்த அரண்மனை கிளி சீரியல் முடிவடைந்த பிறகு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ஓவர் ஆக்டிவாக தான் இருந்துவருகிறார் .அதற்கு முன்பெல்லாம் எப்பவாவது தான் ஒரு போஸ்ட் போட்டுக்கொண்டிருந்தார். ஆனால் தற்போது இவர் விதவிதமாக போஸ்ட் போட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
திண்டாடும் ரசிகர்கள்
ரசித்து ரசித்து எடுக்கும் போட்டோக்களை பார்த்து ரசிகர்களும் ரசித்து ரசித்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். தற்போது எடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரசித்தாலும் நெட்டிசன்களை கேட்கவா வேண்டும் அவர்களும் வகைவகையாக கலாய்த்து கமெண்டுகளை கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத மோனிஷா தினமும் போஸ்ட் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.