அப்பாவை அம்மா மாமான்னுதான் கூப்பிடுவாங்க... இளைய திலகம்!
சென்னை: ஜெயா தொலைக்காட்சியில் ஆல்பம் என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். தினமும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது.
கோவிட் 19 தொற்று லாக்டவுன் அமலில் இருக்கும் நேரத்தில் ஜெயா டிவி, ஆல்பம் நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. நடிகர் சிவகுமார் பங்கேற்ற நிகழ்ச்சியை கடந்த இரண்டு நாட்களாக ஒளிபரப்பினார்கள்.
நேற்று முதல் இளைய திலகம் பிரபு கலந்துக்கொண்ட ஆல்பம் நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.அப்போது பேசிய பிரபு...அம்மா அப்பாவை மாமா என்றுதான் கூப்பிடுவார்கள் என்று சொன்னார்.
அப்பா பயம்
அப்பான்னா எனக்கு பயம்தான்.. தள்ளி தள்ளி நிற்பேன்.அப்பாவுடன் அண்ணன் நல்லா பேசுவார். சிஸ்டர்ஸ் ஜாலியா பேசுவாங்க. நாங்க எல்லாரும் பெங்களூருவில் ஹாஸ்டலில் தங்கி படிச்சுக்கிட்டு இருந்தோம். அப்பாவுக்கு அங்கே ஷூட்டிங் இருந்தாலும், அல்லது எங்களை பார்க்க வேண்டும் என்றாலும் நேராக ஸ்கூலுக்கு வந்துருவாங்க.
எல்லாரையும் போல
அப்போ, எல்லா ஸ்டுடண்ட்ஸ் போல, நாங்களும் அப்பாவை வாய் பிளந்து தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டு இருப்போம். அப்பா சொல்வாங்க...உங்களைத்தான் பார்க்க வந்து இருக்கோம்.. நீங்க என்னை பார்த்துக்கிட்டு நிக்கறீங்கன்னு. உடனே அப்பாவிடம் போய் பேசுவோம் என்று சொன்னார்.
அம்மா போட்டோ விரும்பி
அப்பா கெட்டப் மாற்றி இருந்தாலும், இல்லை வித்தியாசமான சூழலில் அப்பா இருந்தாலும், உடனே போட்டோ எடுத்துக்கலாம் மாமான்னு அம்மா கூப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. அப்பா, வேணாம் வேணாம் என்று தப்பிக்க பார்ப்பார்.வாங்க மாமா என்று கட்டாயமாக போட்டோ எடுக்க வைப்பார் அம்மா என்று கூறினார் பிரபு.
அம்மா சமையல்தான்
அப்பா எங்கே ஷூட்டிங் போனாலும் அம்மாவை அழைச்சுட்டு போயிருவாங்க. அம்மா சமையல்தான் அப்பா சாப்பிடுவாங்க. இதை நம்பியார் அவர்களிடம் அப்பா கற்றுக்கொண்டார்கள். நம்பியார் எங்கு போனாலும் மனைவியை உடன் அழைத்துச் செல்வார். படப்பிடிப்பில் மனைவி சமைப்பதைத்தான் சாப்பிடுவார். இதை அப்பாவும் பின்பற்றினார் என்று பிரபு கூறினார்.
இன்னும் பிரபு கூறும் சுவாரஸ்யமான விஷயங்களை இன்று இரவு ஜெயா டிவியில் பாருங்கள்.