என்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா?
சென்னை: அம்மாவுக்கு பிடித்த மாப்பிள்ளையா அல்லது தனக்கு பிடித்த மாப்பிள்ளையா யாரை மணக்க தயாராக இருக்கிறார்கள் இந்த கால பெண்கள்? ஒரு கலகலப்பான விவாதம்
ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியில்தான் இந்த விவாதம் ஞாயிறு இரவு 09:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
வாரா வாரம் இந்த நிகழ்ச்சியை கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வாரம் அம்மாக்களும், பெண்களும் மாப்பிள்ளைகள் பற்றி பேசி எப்படி மோதிக் கொள்கிறார்கள் பாருங்கள்!
மாப்பிள்ளை பற்றி
தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை பற்றி அம்மாகிட்டே ஷேர் பண்ணி இருக்கீங்களான்னு கரு. பழனியப்பன் கேட்க, அழகிய இளம் பெண் சொல்கிறார். நிறைய ஷேர் பண்ணி இருக்கேன் சார். ஒத்துக்கற மாதிரி கேட்டுட்டு கடைசியில் அப்படியே ஸ்டாப் பன்னிருவாங்க சார்னு சொல்றாங்க.
பதில் அம்மா
அதுக்கு அம்மா பதில் சொல்லறாங்க.. சும்மா ஒரு டைம் பாஸுக்காக ஒரு பிட்டு அவனுங்க போட்டுட்டு போறானுங்க. அதை நல்லதுன்னு நினைச்சுகிட்டு . நம்மகிட்ட இவங்க வந்து சொல்றாங்க.அ தை எப்படி நாம உண்மைன்னு நம்ப முடியும்னு அம்மா சொல்றாங்க..
ஆன்லைன் வந்துருச்சு
இப்போ நிறைய ஆன்லைன்லாம் வந்துருச்சு சார்.நாங்க சந்தேகம் கேட்கணும்னா அவங்க அப்பாகிட்டேயே கால் பண்ணி கேட்கலாம். போட்டோவிலேயே எல்லா டீடெயிலும் வருது சார்னு அந்த பொண்ணு சொல்லுது. அதுக்கு இன்னொரு அம்மா பப்ளிக் நெட்வொர்க்ல வர்றது எல்லாமே ஃபேக் சார்னு சொல்றாங்க.
|
ஃபாலோ செய்தாலும்
நீ என்ன ஃபாலோ செய்தாலும் பசங்க நினைச்சதை சத்தம் போடாம செய்வானுங்க.அதை நம்மால கண்டு பிடிக்கவே முடியாதுன்னு ஒரு அம்மா ஒரே போடா போடறாங்க. ஸ்...அப்பா இப்பவே விவாதம் கண்ணைக் கட்டுதே! எப்போதுதான் ஒரு முடிவுக்கு வருவாங்க?