Pandian Stores Serial: என் மேல ரொம்ப அக்கறையா இருக்காக... புடிச்சு இருக்கு...!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கும், கதிருக்கும் திடீர் கல்யாணம்தான் நடந்தது. இப்போ பாருங்க.. முல்லைக்கு கதிரை ரொம்ப புடிச்சு இருக்காம்...
முல்லைக்கு ஜீவாதான்னு சின்ன வயசிலேயே பேசி வச்சு இருந்தாங்க. ஜீவா பார்த்தா மீனாவை காதலிக்கிறேன்னு வந்து நிக்கறான். அப்புறம் என்ன மீனாவுக்கும், ஜீவாவுக்கும் அண்ணன் மூர்த்தி கல்யாணம் செய்து வச்சுட்டார்.
இந்த புள்ள முல்லை தனியா நின்னுருமே...மாமா பொண்ணு வேற...அதனால ஜீவா தம்பி கதிரை முல்லைக்கு கட்றா தாலியைன்னு சொல்லி கல்யாணம் செய்து வச்சுட்டாங்க.
ஆன் லைனில் ரம்மி விளையாடினா மட்டும் சூதாட்டம் இல்லையா?
எப்படி புடிச்சுது
கல்யாணம் ஆகி இப்போ சந்தோஷத்தின் உச்சிக்கு வந்து இருக்கும் முல்லை, தனது ஓரகத்திகளுடன் தங்களது தாம்பத்யம் பத்தி சிலாகித்து பேசுகிறாள். அப்போதுதான் அவுகளை எனக்கு ரொம்ப புடிச்சு இருக்குன்னு சொல்றா.எப்படி புடிக்க ஆரம்பிச்சுதுன்னும் சொல்றா முல்லை.
முதலில் நடிப்பு
உடனடியா கல்யாணம் செய்து வச்ச உடனே.. உங்களுக்காக நாங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா நடிச்சோம். போக போக அவுகளை நான் புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். புரிஞ்சுக்க ஆரம்பிச்ச பிறகு அவுகளை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.
பெரிசா பேசத் தெரியாது
அவுகளுக்கு பெரிசா பேச எல்லாம் தெரியாது...ஆனா, ரொம்ப அக்கறை படுவாக.. எனக்கு ஒண்ணுன்னா அப்படியே துடிச்சு போறாக... இதுல அப்படியே நான் அவுகளை ரொம்ப ரசிக ஆரம்பிச்சுட்டேன்...என்று இவ்வளவும் பேச பேச, தனம், மீனா, கடைக்குட்டி கண்ணன் எல்லாரும் முல்லையை வாய் பிளந்து பார்க்கறாங்க.
சூப்பர் தம்பதி
முல்லையும் அப்படியே ஃபீல் பண்ணி சூப்பர் தம்பதியா இருப்போமான்னு தெரியலை.. ஆனா, இவுகளை தவிர வேற யாரையும் கல்யாணம் செய்து இருந்தா கூட நான் இம்புட்டு சந்தோஷமா இருப்பேனான்னு சொல்ல முடியாதுன்னு கடைசியில் ஒரே போடா போட்டுட்டா முல்லை. ஆடிப் போயி உட்கார்ந்து இருக்காங்க குடும்பம்.