இந்த பணக்காரங்களே இப்படித்தான் பார்த்துக்க முத்து செல்வி..பார்த்துக்க!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் லொக்கேஷன்ஸ் ரொம்ப நல்லாருக்கு. எத்தனை தடவை சொன்னாலும், காட்சிகளில் காணும் பசுமை கண்களுக்கு குளிர்ச்சி தருவதா இருக்குறப்போ சொல்லிகிட்டே இருக்கத்தானே வேண்டி இருக்கு.
கண்ணன் மாமாவை விரும்பும் சவுந்தரியாவின் காதல் சொல்லாமலே மனசுக்குள்ள புதைச்சு வச்சுக்கற மாதிரியான சூழல் வந்துருது. சின்னவரை விரும்பின முத்து செல்விக்கு விருப்பம் நிறைவேறப் போகுது.
சீரியலின் இந்த போக்கு பலபேருக்கு பிடிக்காத நிலையில், முத்து செல்வி குடும்பம் மெதுவா சின்னவரு வீட்டு அவுட் ஹவுஸுக்கு குடி வர்றாங்க.சின்னவரு கையால மூக்குத்தியும் குத்திகிட்டா முத்து செல்வி. சவுண்டு ஏன் இப்படி விட்டு கொடுக்கணும்னு சீரியல் விரும்பிகள் புலம்பி தீர்த்தாங்க.
நமக்கு புடிச்ச ஆள் டிம்மு டிப்பு அடிச்சா ஆஹா.. லவ் சிக்னலாமே!
அநியாயத்துக்கு மாமனை
சவுந்தர்யா ஆகாஷை விரும்பினப்போ கண்ணன் சவுந்தர்யாவுக்கு போட்டுவிட்டு நிச்சயதார்த்த மோதிரத்தை, முத்து விரலில் சவுந்தர்யா போட்டுவிட, அடிப்பாவி..அநியாயத்துக்கு மாமனை விட்டுத் தர்றாளேன்னு புலம்பினாங்க.
கேசரி செய்து
இப்போ மெதுவா முத்து செல்வி,விஜயலட்சுமி அம்மாவோட பர்மிஷனில் சமையலறை வரைக்கும் வந்தாச்சு.எல்லாருக்கும் ஆசையா கேசரி செய்து தர்றா முத்து செல்வி. அந்த வீட்டிலிருக்கும் சவுந்தர்யாவின் அத்தை ரெண்டு பேர், சித்தி, அத்தை மகன் நாலு பேருக்கும் முத்து செல்வி கேசரி குடுக்கறா.
கெடுத்துவிட்டவ
சித்திதான் விஜயலட்சுமிகிட்டே இருந்து வீட்டை அபகரிக்கத் திட்டமிட்டு, பத்திரத்த்தில் கை எழுத்து வாங்க முயற்சி செய்தவங்க.அதை பாத்திரம் கழுவின தண்ணியை ஊத்தி கெடுத்துவிட்டவ முத்து செல்வி.
மேலஒரு பாசம்.
அதனால,கேசரியை வைக்க சொல்லிட்டு,முத்து செல்வி கையைப்பிடிச்சு முறுக்கறாங்க பாருங்க...அப்போ வருதுங்க சீரியல் விரும்பிகளுக்கு முத்து செல்வி மேலஒரு பாசம்.
மேல பரிதாபம்
அதோடவா...சவுந்தர்யாவின் அக்காங்க ரெண்டு பெரும்.முத்து செல்வி போட்டு இருந்த சவுந்தர்யாவின் மோதிரத்தை விரலிலிருந்து உருவறாங்க பாருங்க...அங்கேயும் முத்து செல்வி மேல பரிதாபம் வருது. அதோட எது எது எங்க இருக்கணுமா அது அது அங்க இருந்தாதாம்மா அழகு..சின்னவரு உங்களுக்கு போட்ட மோதிரம் உங்ககிட்டதாம்மா இருக்கணும்னு அசத்தலா டயலாக் வேற பேசறா.
படும்பாடுகள்
சோ, ஒரு வழியா முத்து செல்வி மேல ஒரு பாசத்தை உருவாக்க காட்சிகளை வச்சுட்டாங்க..இனி அவள் படும்பாடுகள் என்னென்னவாக இருக்குமோ..இந்த பணக்காரங்களே இப்படித்தான் பார்த்துக்க முத்து செல்வி பார்த்துக்க...