பச்சக் பச்சக்... முத்தம்... காத்திருக்கும் முத்துச் செல்வி!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் முத்துசெல்விக்கு கண்ணன் எழுதிய மாதிரி லவ் லெட்டர் எழுதி வச்சுடறாங்க... சவுந்தர்யாவின் ரெண்டு அக்காவும்.
அந்த லெட்டர்ல அன்பே முத்துசெல்வின்னு ஆரம்பிச்சு,என் மேல உனக்கு காதல் இருக்கறது உண்மைன்னா சவுந்தர்யா பிறந்த நாள் அன்னிக்கு முத்தம் தரணும்..
அதுவும் ரெண்டு என்னோட கன்னத்துலயும் பச்சக் பச்சக்னு சத்தம் கேட்கற மாதிரி முத்தம் தரணும்னு எழுதி வச்சுடறாங்க.
பாஞ்சாலி டயலாக்கையே மாத்திய சீரியல் நடிகை...இது கூட நல்லாத்தான்யா இருக்கு...!
முத்துச்செல்வி
இதை உண்மைன்னு முத்துச்செல்வி நினைச்சுக்கறா. போதாதற்கு தங்கச்சி தங்கம் வேற உசுப்பேத்தறா. இவளும் கொஞ்சம்கூட யோசிக்காம சவுந்தரியாவின் பிறந்த நாள் அன்று சின்னவரின் கன்னத்தில் முத்தம் குடுக்கத் தயாரா இருக்கா.
ஆகாஷ்
சவுந்தர்யாவின் பிறந்த நாள் மிக கோலாகலமா நடந்துக்கிட்டு இருக்கு. அப்போ, சவுந்தர்யாவின் முன்னால் காதலன் ஆகாஷ் வர்றான்.இவனைக் கண்டதும் சவுந்தர்யாவின் அப்பா, அம்மா அதிர்ச்சி ஆகறாங்க.
சவுந்தர்யா
ஆகாஷ் மியூஸிக்கல் சேர்ஸ், டான்ஸ் போட்டின்னு வச்சு இடத்தையே கலகலப்பாக்கிடறான். எல்லா போட்டியிலும் ஜெயிச்ச சவுந்தர்யா,தன் கண்ணன் மாமா கையால தன் கழுத்துல தங்க செயின் போட்டுக்கறா.
முகத்தில் சந்தோசம்
சவுந்தர்யாவின் அம்மா விஜயலட்சுமி, இந்த பையன் ஆகாஷ் வந்தவுடனே எனக்கு பிடிக்காம இருந்துச்சுங்க .ஆனா.வந்த கொஞ்ச நேரத்துலயே இந்த இடத்தை கலகலப்பா ஆக்கிட்டான். சவுந்தர்யா முகம் பாருங்க சந்தோஷமா இருக்குன்னு சொல்றாங்க.
சந்தோஷமா இருக்கியாம்மா
சவுந்தர்யா உன் முகத்தை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குமான்னு அம்மா சொல்ல,நீ சந்தோஷமா இருக்கல்லம்மா.. அதுவே எனக்கு போதும்னு சொல்றா.
முத்தம் கொடுக்க
முத்துச்செல்வி முத்தம் கொடுக்க சரியான சமயம் பார்த்து காத்து கிடக்கா...இடையில் இந்த தங்கம் புள்ளை வேற உசுப்பேத்திக்கிட்டு இருக்கா...பாவம் என்ன நடக்கப் போவுதோ...