Naaam iruvar namakku iruvar serial: உனக்காக பிறந்தேனே எனதழகா... ஆஹா.. காதல் மயக்கம்!
சென்னை: தொலைக்காட்சி சீரியல்களில் சிச்சுவேஷன் சாங்ஸ் அதிகமாகி போச்சுங்க... எல்லாம் சினிமா பாடல்களை பின்னணியில் ஒலிக்க வைப்பதுதான்.
புதுப் புது பாடல்கள்னு நினைச்சுக்காதீங்க... ஏற்கனவே பழகிய பாடலில் இப்படி சீரியல் நாயகன் நாயகிகள் ரொமான்ஸ் பண்ணும்போது கூடுதல் இனிமையாகத்தான் இருக்கு.
என்ன மாதிரி பாடல்களை செலெக்ட் செய்து போடறாங்க தெரியுமா? என்னவோ இந்த நாயகன் நாயகிக்காக பாடல் போட்ட மாதிரியே பொருத்தமா வேற இருக்குது.
தேவி மாயன்
மாயன் தேவி அண்மை நாட்களாக கொஞ்சம் கொஞ்சமா நெருங்கிகிட்டு இருக்காங்க. தேவியின் ஆறுதல் வார்த்தைகள் ஒவ்வொண்ணும் மாயனின் மனதை அப்படியே புரட்டிப் போடுவதா இருக்குது. எந்த அளவுக்கு தேவி இரட்டை மனதில் இருந்தாளோ ..அந்த அளவுக்கு இப்போது மாயன் பக்கமே முழுவதுமாக சாய்ந்து மாயனின் காதலில் விழுந்து கிடக்கிறாள்.
sundari neeyum sundran naanum serial: ப்ப்பா...! இதுக்கு கூட இப்படி சொல்லலாமா?
தகுதியானவனா நான்
இந்த அளவுக்கு என்னை நம்புறீங்களே அதுக்கு நான் தகுதியானவனான்னு எனக்கு இன்னும் பயமாத்தான் இருக்குதுங்க.எப்படி உங்களை நான் பார்த்துக்க போறேன்னு தெரியலைன்னு மாயன் கண் கலங்கி சொல்றான். தேவி முகத்தில் வாட்டம்..இருந்தாலும் கண் கலங்க நிதர்சனத்தை பேசுகிறாள்.
என்னை நம்பு
நான் ஒரு முடிவு எடுத்த நல்ல முடிவா எடுப்பேன்னு உனக்கு நம்பிக்கை இருக்கு இல்லை. நான் ஒருத்தனை செலக்ட் பண்ணினான சரியாத்தானே இருக்கும்? உன்னை நீ நம்ப வேணாம்.என்னை நீ நம்பு.. .நீ ரொம்ப நல்லவண்டா.. உன்னை எல்லாரும் சேர்ந்து ஏமாத்திருவாங்களோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என்று குரல் கம்மலுடன், ஆதங்கத்துடன்.. எனக்காக உன்னை நான் பாதுகாத்து ஆக வேண்டும் என்கிற எண்ணத்துடன் பேசுகிறாள்.
மடியில் மாயன்
உடனே தேவியின் மடியில் மாயன் படுத்துக்கறான் .டேய்.. என்னடா பன்றேன்னு தேவி கேட்க.. நீங்கதானேங்க அன்னிக்கு என்கிட்டே பர்மிஷன் வாங்க தேவையில்லைன்னு சொன்னீங்க.. .அதேன்னு ரொம்ப வசதியா தேவியின் மடியில் படுத்துக்கறான் மாயன்.
அப்போதுதான் உனக்காக பிறந்தேனே எனதழகா பாடல்...