Naam iruvar namakku iruvar serial: நீ பேசுடா.. மாயனை பேச வச்சு ரசிக்கும் தேவி
சென்னை: மாயனை பேச வச்சு ரசிச்சுகிட்டு இருப்பதோடு, நீ பேசுடா என்று மனதுக்குள்ளும் சொல்லிக்கறா தேவி. இப்படி பேசும் ஆண்களிடம்தான் பெண்கள் விழுந்து விடுகிறார்கள்.
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனை தேவிக்கு பிடிக்க ஆரம்பிச்சு, அவனுக்கு என்று மனதில் தனி இடமும் கொடுத்து விடுகிறாள் தேவி.
இதைத் தெரிஞ்சுக்கிட்ட மாயன் தனது அலப்பரயை துவங்கி ஒரு ஆட்டம் போடுகிறான் பாருங்கள். பார்க்க ரொம்ப ஜாலியாத்தான் இருக்கு.
இப்போ சலங்கையை
மாயனைத் தேடிகிட்டு பேங்கில் இருந்து ஒரு ஆள் வருகிறார்.அவரைப் பார்த்ததும் வரவேற்று கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து பேசும் பேச்சு அப்பப்பா.. நீ பேசுடா.. சும்மாவே ஆடுவான்.. இப்போ சலங்கையை வேற கட்டி விட்டாச்சுன்னு மனசுக்குள் சொல்லிக் கொள்ளும் தேவி மாயனின் பேச்சை ரசிக்கிறாள்.
ஃபிளைட் டிக்கெட்
வாங்க வாங்க நீங்க வரேன்னு சொன்னதும், மலேசியா டிக்கெட்டை கூட கிழிச்சு தூரப் போட்டுட்டு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்னு சொல்றான்.அப்படியா சார் மலேசியாவுலே என்ன வேலை சார்னு இவன் கேட்கிறான்.
தலைவர் போட்டி
மலேசியாவில் ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் போட்டி நடக்குது. அதுக்கு எலக்சன்ல நிக்கத்தான் போகலாம்னு கிளம்பினேன்.இப்போ நான் வரலேன்னு என்னை அன்னபோஸ்ட்ல செலக்ட் பண்ணிட்டாங்க.. அமெரிக்காவில் பதவி ஏத்துக்கப் போறேன்னு சொல்றான்.
பீலா இது?
மலேசியாவில் எலக்ஷன்,அமெரிக்கவில் பதவி ஏத்துக்கறது..என்ன மாதிரி பீலா பாருங்க.இதை கேட்டு மனைவி தேவி ரசிக்கறா. நீ பேசுடா மவனே.. உன் ஆட்டம் இதுன்னு சொல்வது போல நமட்டு சிரிப்புடன் ரசிக்க, ஆ ன்னு வாய் பிளந்து பார்க்கிறார் சித்தப்பு.