Naam Iruvar Namakku Iruvar Serial: வேணாம் இந்த ஐ லவ் யூ எனக்கு...நீயே வச்சுக்கோ!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ரொம்ப நாள் பார்க்காத காதலர்கள் தேவியின் தம்பி கார்த்திக்கும், மாயனின் தங்கச்சியும் அன்னிக்கு கோயிலில் சந்திச்சுக்கறாங்க.
இத்தனை நாள் சந்திக்கவே இல்லை.. இப்போதும் சும்மா உட்கார்ந்து இருந்தா அப்புறம் எதுக்கு என்னை வர சொன்னேன்னு கேட்கிறாள் அவள்.
இத்தனை சந்திக்கலேன்னா வீட்டில் பிரச்சனைன்னு சொன்னேன்ல..இப்போதுதான் வந்து இருக்கேனே.. பேசுன்னு சொல்றான் கார்த்திக்.
Ayudha Ezhuthu Serial: சப் கலெக்டருக்கு இந்த புரபோஸல் கற்பனைதான்... நல்லாருக்கா?
பிரச்சனை முடிஞ்சுருச்சா?
இப்போ பிரச்சனை முடிஞ்சுருச்சா? சரி சொல்லு.. அப்படி என்னதான் உங்க வீட்டில் பிரச்சன்னைன்னு கேட்கிறாள், பிரச்னைக்கு காரணமானவங்களே இவளோட அண்ணனும், அவனோட அக்கவும்தான்,. இவன் லண்டனில் படிச்சுட்டு வந்ததுனால அவனுக்கு இந்த விவரம் எல்லாம் தெரியலை. என் அக்கா டைவர்ஸ் பிரச்சனை என்று சொல்றான் கார்த்திக்.
கிடைச்சுதா டைவர்ஸ்
இப்போ என்ன டைவர்ஸ் கிடைச்சு பிரச்சனை தீர்ந்து போச்சான்னு காதலி கேட்கிறாள். இல்லை, என் மாமா வாழணும்னுதான் நினைக்கிறார். அக்கா இஷடம் இல்லாதவள் போலவே இருந்துட்டு கடைசியில புருஷன் கூட வாழணும்னு ஆசைப்படறா போலன்னு சொல்றான்.
இது அவங்க
விவாகரத்து என்பது அவங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் எந்த நேரத்தில் ரெண்டு பேரும் சேர்ந்து என்ன முடிவு எடுப்பாங்கன்னு சொல்ல முடியாதுன்னு சொல்றா காதலி. சரி விடு..அதுக்குத்தான் உன்னை நான் வந்து பார்க்க முடியாம போச்சு. சரி.. ஐ லவ் யூன்னு சொல்றான்.
வேணாம் சீ
சீ எனக்கு இந்த ஐ லவ் யூ வேணாம். சும்மா உதட்டுல சொல்றே.. எங்கியாவது ஃபீலிங்ஸோட சொல்றியா? இந்தா உன் ஐ லவ் யூ நீயே வச்சுக்கோன்னு அவன் பக்கம் திருப்ப...வேணாம் வேணாம் இந்த ஐ லவ் யூ நீயே வச்சுக்கோன்னு அவன் அவள் பக்கம் திருப்பி விடறான். இப்படியே கோயிலில் விளையாடி உண்மையில், ஃபீலிங்ஸ் வந்துருது.
இது எப்படி இருக்கு?