Naam Iruvar Namakku Iruvar Serial: உன் மனசில் ஏதாவது ஒரு மூலையில் நான் இருந்தால்..!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில்.தாமரையை டாக்டர் அரவிந்த் விவாகரத்து செய்து விடுகிறான். காரணம், அரவிந்த வளர்த்த அம்மாவுக்கு தாமரையை பிடிக்காமல் போனது மட்டும்தான்.
அரவிந்த்,மாயன் இருவரும் இரட்டையர்கள், மாயனின் பொண்டாட்டி தேவியின் அப்பாவும், அரவிந்தின் மனைவி தாமரையின் அப்பாவும் ஒருவர்தான்.அம்மாதான் வேறு வேறு. தாமரையை அரவிந்த் விவாகரத்து செய்தது, மாயனின் மனைவியான தேவியால் தாங்கிக்க முடியலை.
தங்கை தாமரையை தனது வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து, அவளுக்கு நிர்வாகம் போன்ற விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்,. அரவிந்த் தாமரை அடிக்கடி சந்திக்க ஒரே ஊரில் இருவரும் இருந்தால்தான் நல்லது என்று யோசித்து, தாமரையை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடறா தேவி.
கோயிலில் இருவரும்
யதேச்சையாக அரவிந்த் விளக்கு ஏற்றி வைக்க கோயிலுக்கு வருகிறான். அங்கு தாமரையும் யதேச்சையாக வர ,அரவிந்த் அவளைப் பார்த்து எதுவும் பேச முடியாமல் நிற்கிறான். தாமரை அரவிந்தின் அருகில் வந்து, நல்லா இருக்கீங்களான்னு கேட்க, நீ பேசமாட்டேன்னு நினைச்சேன் தாமரைன்னு சொல்றான்.
நல்லா பார்த்துக்கிட்டீங்க
ஒரு வருஷம் ஒரே வீட்டில் இருந்திருக்கோம்.என்னை உங்க வீட்டில் இருந்தவரைக்கும் நல்லா பார்த்துக்கிட்டீங்க. பேசாமல் போனால் நல்லாவா இருக்கும்? அதுதான் எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன்னு மறுபடியும் சொல்றா.தாமரை என் மேல எதுவும் தப்பு.. என்று சொல்வதற்குள் நான் உங்களைத் தப்பு சொல்லவே இல்லைங்க. என்னை பிடிக்கலை விவாகரத்து பண்ணிடறேன்னு சொன்னீங்க .அதோட விட்டுட்டேன் .பழசெல்லாம் எதுக்குன்னு சொல்றா.
தாமரை அம்மாதான்
தாமரை உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்... அம்மாதான்னு அவன் சொல்லி முடிப்பதற்குள்.. ஐயோ அத்தையைப் பத்தி நான் ஒண்ணும் சொல்லலைங்க. நடந்து முடிஞ்சதை பத்தியும் நான் ஒண்ணும் சொல்லலை. பழசு எல்லாத்தையும் மறந்துருவோம்ங்கன்னு சொல்லிட்டு கிளம்பறேன்னு சொல்லிட்டு போறா.
என்ன தாமரை
என்னை நாலு அடி அடிச்சுருக்கலாம் தாமரை. இப்படி பேசிட்டு போறியேன்னு கண் கலங்கின அரவிந்த், என் நினைவு உன் மனசின் ஒரு ஓரத்தில் இருந்தால் கூட என்னை நீ திரும்பிப் பார்ப்பே.. ப்ளீஸ் பாரு தாமரைன்னு கண்ணீருடன் அவளையே பார்த்து நிற்க, தாமரை திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள்.