For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Naam iruvar Namakku Iruvar Serial: தாமரை அரவிந்தை விட்டுட்டு வேற கல்யாணமா? செய்துப்பாளா?

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தன்னை விவாகரத்து செய்த அரவிந்தை மறந்துட்டு வேற கல்யாணம் செய்துக்குவாளா?

தாமரை மீது ரொம்ப லவ்வில் இருந்த அரவிந்த், அம்மாவின் மனம் கோணாமல் நடந்துக்கறேன் பேர்வழி என்று, கோர்ட்டில் தாமரையை விவாகரத்து செய்ய சம்மதிக்கறேன்னு சொல்லிடறான்.

ஆனால், தாமரையை அழைச்சுக்கிட்டு ஏற்கனவே கோர்ட்டுக்கு போயி, தாமரையை விவாக ரத்து செய்வதில் விருப்பம் இல்லை என்று கணவன் மனைவியாக சென்று கை எழுத்து போட்டுவிட்டு வந்துவிட்டார்கள்.

Bigg boss 3 tamil: எனக்கு ஒடம்பு வச்சுட்டுதுன்னு சொல்றாங்க... லாஸ்லியா Bigg boss 3 tamil: எனக்கு ஒடம்பு வச்சுட்டுதுன்னு சொல்றாங்க... லாஸ்லியா

அம்மா அரவிந்த்

அம்மா அரவிந்த்

எப்போதும் முகத்தைத் தூக்கி வச்சுக்கிட்டு இருந்த அம்மாவை உட்கார வச்சு அரவிந்த் மனம் விட்டு பேசறான். அம்மா அப்போதும் தாமரையை எனக்கு பிடிக்கலை. ஆனால், உனக்கு பிடிச்சு இருக்கு. அதனால் நீங்க சேர்ந்து வாழுங்கன்னு சொல்லிட்டுத்தான் நான் தூக்க மாத்திரை சாப்பிட்டேன்.இப்பவும் அதுதான் சொல்றேன்.நீ உன் விருப்பப்படி வாழு அரவிந்த். நான் முமபைக்கு போயி இருந்துக்கறேன்னு சொல்றாங்க.

அம்மா பேசியது

அம்மா பேசியது

அம்மா பேசிய வார்த்தைகளை மட்டும் வச்சு, இனிமேல் தாமரையுடன் சேர்ந்து வாழ முடியாது என்று முடிவு செய்து, தாமரையின் ஆசைகளை கேட்டு, ஒவ்வொரு ஆசையாக நிறைவேற்றி வைக்கிறான். அம்மா விரும்பாத பெண்ணுடன் நம்மால் வாழ முடியாது என்று நினைத்து,அவளை அங்கு இங்கு என்று அழைத்துச் சென்று தாமரையுடன் சந்தோஷமாக இருக்கிறான்.

சந்தோஷமாக கோர்ட்டுக்கு

சந்தோஷமாக கோர்ட்டுக்கு

தாமரை அரவிந்துடன் சந்தோஷமாக கோர்ட்டுக்கு கிளம்புகிறாள். அதுதான் அன்னிக்கு விவாகரத்து செய்வதில் விருப்பம் இல்லை என்று கை எழுத்து போட்டுட்டு வந்தாச்சேன்னு சந்தோஷத்தில் மிதக்கிறாள் தாமரை. ஆனால், அங்கு கூண்டில் ஏறி நின்று இடியைத் தூக்கிப் போட்டது போல, தாமரையை டைவர்ஸ் பண்ண சம்மதம்னு சொல்றான்.

தாமரை உடைந்து

தாமரை உடைந்து

உடைந்து போகிறாள் தாமரை, தாமரையின் தாய் மாமா அரவிந்தை அடித்து துவைக்கிறார். தாமரையால் நம்ப முடியவில்லை. முதலில் அத்தைக்கு பிடிக்காமல் போனது. இப்போது அத்தையும் ஏத்துக்கிட்டாங்க., இவர் எதற்கு இப்படி என்கிற கேள்வி மட்டுமே அவளுக்குள் அவளை உறைய வைத்து இருக்கிறது. ஆனால், அரவிந்தின் அம்மா முதலிரவு அன்று தூக்க மாத்திரை குடித்துதான் உடம்பு சரியில்லாமல் போச்சு என்பதை அரவிந்த் யாரிடமும் சொல்லவில்லை.

இப்போது தாமரையின் மாமா விவாகரத்து கிடைத்த நான்கே நாட்களில் ஒரு மாப்பிள்ளையை அழைச்சுக்கிட்டு வர்றார். தாமரையும் உங்கள் விருப்பம் என்று சொல்கிறாள்.

அரவிந்தை விட்டுட்டு வேற கல்யாணம் செய்துக்குவாளா தாமரை?

English summary
Will Vijay TV's naam iruvar namakku iruvar serial marry someone else in the serial? Aravind, who was so in love with thamarai , said that his mother's heart was not going to behave in such a way, that he would agree to divorce Lotus in court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X