Naam iruvar namakku iruvar serial: மாயன் தேவி ரொமான்ஸ்.. ரவுசு பார்டரைத் தாண்டுதே!
சென்னை: அடடா மழைடா அடை மழைடான்னும், மேகம் கருக்குது.. மின்னல் சிரிக்குது.. பாடலுக்கும் மழையில் நனைஞ்சாச்சு. இப்போ அசிஸ்டெண்ட் டைரக்டரை கூப்பிட்டு, அடுத்து என்ன சீன் வைக்கலாம் டான்னு கேட்டால் என்ன சொல்லுவான் சொல்லுங்க.
சார் செம மழையில் ரெண்டு பேரும் நனைஞ்சு இருக்காங்க. அடுத்தது ஹீரோயினுக்கு தும்மல், சளி, காய்ச்சல்னு இப்படி வைக்கலாம் சார். அப்போதுதானே ஹீரோவுக்கு ரொமான்ஸ் வேலை இருக்கும்னு சொல்லுவான்.
அப்புறம் என்ன பட்டு பட்டுன்னு அதற்கான வேலைகள் ஆரம்பமாகும். காய்ச்சலில் ரொமான்ஸான்னு . சின்ன சின்ன அசிஸ்டென்ட் பசங்க நினைச்சுக்குவாங்க.
தும்மல் தேவிக்கு
தேவி கட்டிலில் படுத்து எழுந்தவள், வரிசையாக தும்மிக் கொண்டே இருக்கிறாள். கீழே தரையில் படுத்துக் கொண்டு இருந்த மாயன் தும்மும்போது எல்லாம் ஆயுசு நூறு, ஆயுசு இருநூறுன்னு சொல்லுவான். அவன் நானூறு வரை சொல்ல, ஏண்டா உனக்கு அறிவே இருக்காதா? இல்லை நடிக்கிறியா? ஜலதோஷம் பிடிச்சு அவஸ்தையில் தும்மிகிட்டு இருக்கேன். நீ என்னடான்னா ஆயுசு கணக்கை ஏத்திகிட்டே போறேன்னு கேட்கிறாள்.
நம்ம ஊரு ஹீரோ.. விக்கிரவாண்டியை வெல்ல.. கையில் கரும்புடன் களம் குதித்த கந்தசாமி!
என்னங்க செய்யட்டும்?
ஐயையோ என்னங்க இப்பிடி சொல்லிப்புட்டீங்க. இருங்க என்ன செய்யனும் சொல்லுங்கன்னு பதறி நிற்கிறான். ஒண்ணும் செய்ய வேணாம் தைலத்தை எடுத்துட்டு வான்னு சொல்றா. இருங்க எனக்கு ஒரு சித்த வைத்தியம் தெரியும். அதை எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டு, ஆவி பிடிக்கும் பாத்திரத்தை எடுத்துட்டு வந்து அவள் முகத்தை அமுக்குகிறான்.
கடைசியில் ஒரு முத்தம்
அவனும் மெல்ல புகுந்து கொண்டு, மூச்சை நல்லா இழுத்து பிடிச்சுட்டு கடைசியா விடும்போது ஒரு முத்தம் குடுத்துக்கனும்ங்க என்று சொல்கிறான். டேய்.. இது யாரு சொன்னதுன்னு கேட்கிறாள். பாருங்க.. உள்ளே சித்தர் தெரியறார். அவர்தான் சொன்னார்னு சொல்றான் மாயன்.
வெப் சீரிஸ் பிரியர்களுக்கு செம வேட்டைதான்.. சன்னி லியோனை வைத்து உருவாகும் காமசூத்ரா
தைலம் பிறகு
சரி போதும்.. இப்போ நல்லாருக்கு.. தைலத்தை கொஞ்சம் தேய்ச்சுக்கறேன்னு சொல்றா. நோ நோங்க.. நான்தானே தேச்சுவிடுவேன்னு சொல்றான்.அவளும் பேசாமலிருக்க, அவளில் நெற்றியில் தைலத்தை தேய்ச்சு விட்டு மயங்குகிறான்.அவள் சிரித்தபடி, இவன் முகத்தையே பார்த்து இருக்கிறாள்.
சீன வைத்தியம்
பிறகு கன்னத்தில் தேய்க்க வருகிறான், கன்னத்துல எதுக்குடான்னு தேவி கேட்க, இது சீனா வைத்தியம்ங்க. கன்னத்துலயும் தேய்க்கணும்னு சொல்லி கன்னத்தை தொட்டு தடவி தடவி தேய்க்கிறான். ஆஹா... ஆஹா.. கன்னத்தை செதுக்கி வச்சிருக்காங்கய்யான்னு மனசுக்குள்ள பேசிக்கறான். பிறகு கையை பிடித்து தேய்த்துவிட்டு, இன்னொடு கையையும் பிடித்து தேய்க்கிறான். உள்ளங்கையில் முத்தம் வைக்க போகையில் டேய் என்று கையை இழுத்துக் கொள்கிறாள் தேவி.. சரி சரி போதும்!