For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Naam Iruvar Namakku Iruvar Serial: உனக்காக எல்லாம் உனக்காக.. இது என் டர்ன்!

Google Oneindia Tamil News

சென்னை: இதுவரை உனக்காக எல்லாம் உனக்காக என்று தேவிக்காக எத்தனை அவமானம் பட்டாலும் தேவி வீடே கதி எனக் கிடந்தான் மாயன். தேவியும் இவனை ஏத்துக்கறதா வேணாமா என்கிற பெரும் குழப்பத்தில் இருந்தாள்.

இப்போது இனி என் டர்ன் என்று ஒரு முடிவுக்கு வந்திருக்கிறாள் தேவி. அதை மாயனிடம் எவ்வளவு காதலாக சொல்கிறாள் பாருங்கள்.

இத்தனை பீடிகை எதில் என்று நீங்கள் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலைப் பார்த்தால் தெரியும்.

நீ சிரிச்சா போதுமே..வேறெதுவும் வேணாமே..நம்ம துருவ் விக்ரம்!நீ சிரிச்சா போதுமே..வேறெதுவும் வேணாமே..நம்ம துருவ் விக்ரம்!

மாயனும் தேவியும்

மாயனும் தேவியும்

தாமரை இலை தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமல் மாயனும், தேவியும் வாழ்ந்து வந்தாலும்.. இப்போது மாயனின் பக்கம் சாய துவங்கி இருக்கிறாள் தேவி. அடிக்கடி காதலுடன் பார்ப்பது.. காதலை சொல்ல வருவது.. அந்த நேரத்தில் மாயன் எதாவது சிக்கலில் மாட்டிக்கறது என்று இருந்த காலம். இப்போ இருவரும் ஒன்றாக உட்கார்ந்து காதல் வசனம் பேசுகிறார்கள்.

டர்ன் என்னோடது

டர்ன் என்னோடது

எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்...இவ்ளோ நாள் நீ எனக்காக எல்லாத்தையும் பண்ணினே.. இது என்னோட டர்ன் நானும் உனக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன். தேவி இப்படி பேசப் பேச மாயன் முகத்தில் பரவசம்.. கூடவே ஆச்சரியம்..பயம்..!

நானும் இருப்பேன்

நானும் இருப்பேன்

உன்னை எந்த இடத்திலும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்.ஆனால், இதுவும் ஒரு நல்லதுக்குத்தான்... இவ்ளோ நாள் மேலே ரூமில் நான் கட்டில்ல..நீ தரையில் படுத்துகிட்டு இருந்தோம். இப்போ பாரு அவங்க புண்ணியத்துல நீயும் நானும் ஒரே பாயில் பக்கத்து பக்கத்துல ஒண்ணா படுத்து தூங்கப்போறோம்..

உண்மையை சொல்லட்டுமா?

உண்மையை சொல்லட்டுமா?

நான் ஒரு உண்மையை சொல்லட்டுங்களா? இதுக்கெல்லாம் நான் தகுதியானவனான்னு தெரியலை. எந்த ஜென்மத்துல செய்த புண்ணியமோ நீங்க எனக்கு வரமா கிடைச்சு இருக்கீங்க.உங்களை நான் எப்படி ஆயுசு முழுக்க பத்திரமா பார்த்துக்கறதுன்னுதான் என்னோட கவலை..

நான் உன்னை

மாயன் இப்படி சொல்ல,தேவி உடனே எனக்கானவன் நீ உன்னை பார்த்துக்கும் கடமை எனக்கும் உ ண்டு என்பது போல நீ என்னை பார்த்துக்க வேண்டியதில்லை.. நான்தான் உன்னை பத்திரமா பார்த்துக்கணும்.... என்று மாயன் கண்களில் நீர் துளிக்கும்படி பேசுகிறாள் தேவி.

English summary
Mayan is the devi"s house. despite all the shame she has for Goddess that everything is for you. The goddess was in great confusion as to whether she wanted him.Devi has now come to an end that is my turn. Look how much she loves Mayan. If you look at the two of us in Vijay TV,naam iruvar namakku iruvar know what this is.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X