Naam iruvar namakku iruvar serial: பெய்யுதே மழை.. தேவி மடியில்... மாயன் செய்த மாயமென்ன?
சென்னை: கேட்டது கிடைத்ததா ? அனுபவிக்கணும். எப்படி ஏதுன்னு ஆராய கூடாது. இருந்தாலும் பெய்யென பெய்யுதே இந்த மழை மாயன் செய்த மாயம்தான் என்ன?
தேவியின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிய மாயனிடம் தனது சந்தோஷத்தை நிறைவை காட்டும் நேரம் இது.அதுதான் அவள் மவுனம் என்கிறாள்.
அதற்கேற்ப அவன் மவுனமான நேரம் பாடலை இசைக்க விடுகிறான். தேவி மாயனின் மனதை குளிர்விக்க மாயன் மழை வர செய்து அவளையே குளிர்விக்கிறான்.
நிறைஞ்ச மனசு
ஏண்டா எனக்கு பீஸ்ஃபுல்லா இருக்குன்னு சொல்றேனே இதுக்கு அர்த்தம் தெரியுதா உனக்குன்னு கேட்கிறாள் தேவி.அவள் முகம் நிறைய மகிழ்ச்சி. இதழ்கள் விரிக்காத மெல்லிய புன்னகை. அர்த்தம் தெரியாதுங்க... ஆனா உங்க முகத்தில் பல உணர்ச்சிகளை பார்க்கும்போது அர்த்தம் புரியுதுங்கன்னு சொல்றான் மாயன்.
Bigg Boss 3 Tamil: கவின் ஆட்டத்தை முடிச்சுக்கிட்டு கிளம்பறார் போல....!
ஒரு மாதிரி ஆள்
நீ ஒரு மாதிரியான ஆள்தாண்டான்னு தேவி சொல்ல, ஏங்க மொட்டையா இப்படி சொன்னான்னு இழுக்க.. பார்க்க கரடு முரடா இருந்தாலும் உனக்குள்ள எனக்கு புடிச்ச மாதிரி, என்னை சந்தோஷப படுத்தற மாதிரி ஒருத்தன் இருக்காண்டா. நீ பக்கத்துல இருந்தா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.
மழை இருந்தால்
இந்த நேரத்துல மழை பெய்தா நல்லாருக்கும்னு தோணுது. மனசுக்கு இதமா இருக்கும்னு தோணுதுன்னு சொல்கிறாள். ஏங்க... உங்களுக்கு மழை பெய்யணும்..அவ்ளோதானே.. அப்படி வந்தா என்ன செய்வீங்கன்னு கேட்கிறான். என்ன செய்யணும்னு தேவி கேட்க, என்னை கட்டி புடிச்சு ஒரு உம்மா தரணும்னு சொன்னவன்.. இல்லைங்க சும்மா..சும்மான்னு மழுப்பிட்டு மழையில நனைஞ்சு என் கூட டான்ஸ் ஆடணும்னு கேட்கறான்.
திடீர்னு மழை
எப்படிடா திடீர்னு மழை பெய்யும்னு கேட்கும் போதே, மழையே பெய்யுன்னு சொன்ன மாதிரி மழை கொட்டுது. சொன்னபடி தேவியை இழுத்து சென்று அடடா மழைடா அடை மழைடான்னு டான்ஸ் ஆடறாங்க. திடீர்னு மழை நிற்க ரைட்டு, ரெண்டு ஸாங்டா ..ஏங்க.. ரெண்டு சாங் சொல்லி இருக்கேன் இன்னொரு டான்ஸுங்கன்னு சொல்றான்.
தேவியும் சிரித்தபடி ஓகே சொல்ல, மிக நெருக்கமாக மழையில் நனைந்தபடி பாடல். இடுப்பை அனைத்து பாடுகிறான். சுத்தி வந்து கையை இழுக்கிறான். கடைசியில் ஒரு காலை மண்டியிட்டு ஒரு காலை குத்த வைத்து,தேவியின் கையை பிடிச்சு அந்த காலில் உட்கார வைக்கிறான். தேவி உட்கார்ந்து அவன் முகத்தை பார்த்து, கன்னத்தில் கை வைத்து இதமாய் தடவி கண்ணோடு கண் நோக்கி சிரிக்கிறாள்.
இதுதான் மாயன் செய்த மாயம்..காதல் வலையில் விழுந்தாள் தேவி.