Naam Iruvar Namakku Iruvar Serial: ஏங்க...நானும் கட்டிக்கறேங்க! கைகளை விரித்தபடி மாயன்
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இரண்டு பெண்டாட்டிக்குகாரர் கதை, இரட்டையர்களாக பிறந்தவர்களின் கதை என்று போகிறது.
இரண்டு பெண்டாட்டிக்காரரில் முதல் பொண்டாட்டிக்கும் தேவியும், இரண்டாவது பெண்டாட்டிக்கு தாமரையும் பிறக்கிறார்கள். முறைக்கு அக்கா தங்கையான இவர்கள் மாயன், அரவிந்த் என்கிற இரட்டையர்களை கல்யாணம் செய்துக்கறாங்க.
ஆனால், இருவருமே இன்னும் சேர்ந்து வாழவில்லை. அதற்குள் டாக்டர் அரவிந்த் தாமரையை விவகாரர்த்து செய்துவிடுகிறான்.அப்செட்டில் இருக்கும் தாமரையை தனது வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்துடறா தேவி.
சமையல் தாமரை
வீட்டில் சமையல்காரி வரவில்லை என்று தாமரையை சமைக்க சொல்கிறான் மாயன். தாமரையின் சமையலை புகழ்ந்து எல்லாரும் டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.அப்போது அங்கு வந்த தாமரை, நீயா சமைச்சேன்னு கேட்கிறாள்.ஆமாம் அக்கா நான்தான் சமைச்சேன்னு தாமரை சொல்ல .உட்காருங்க..நீங்களும் சாப்பிட்டு பாருங்கன்னு மாயன் சொல்றான்.
சமைக்க சொன்னது?
தாமரை உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லை... உன்னை யாரு சமைக்க சொன்னதுன்னு தாமரையை தேவி திட்ட... என்னங்க..இப்படி கத்தறீங்கன்னு மாயன் கேட்கிறான்.உனக்கும் அறிவில்லைடா... அவள் சமையலை புகழ்ந்து இதுல சுத்தி உட்கார்ந்து எல்லாரும் சாப்பிடறீங்கன்னு கேட்கிறாள். ஏம்மா சமையல் நல்லா இருந்தா சாப்பிட்டு பாராட்டத்தான் வேணும்னு அப்பா சொல்றார்.
பக்கம் கூடாது
இனிமே நீ சமையலறை பக்கம் போனே.. என்ன நடக்கும்னே தெரியாதுன்னு சொல்லிட்டு போயிடறா. அவங்க அப்பிடித்தான் தாமரை...என்ன நினைச்சு எதை செய்வாங்கன்னே தெரியாது. அப்புறமா அவங்ககிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்கலாம். இப்போ சாப்பிடலாம்னு சொல்லிட்டு சாப்பிடறாங்க.
நோ ஃபீல்
தாமரை ஃபீல் பண்ணாதே.. நானே போயி இப்போ தேவிக்கிட்டே கேட்டுட்டு வரேன்னு சொல்லிட்டு திரும்ப, அங்கே தேவி நிற்கிறாள்.என்னங்க நீங்க வீட்டில் உங்க தம்பி நெட்டப்பு பேசறதே இல்லை.. சொட்டப்பு ஏதாவது ஏடாகூடமா பேசறாப்டி. உங்க அம்மா மூஞ்சை திருப்பிகிட்டு போறாங்க. நீங்களும் இப்படி பேசினா எப்படிங்கன்னு கேட்கிறான் மாயன்.
அக்கா மன்னிச்சுருங்க
இதை கேட்ட தாமரை ஓடிவந்து அக்கா என்னை மன்னிச்சுருங்கன்னு கட்டிக்கறா தேவியை. ஆஹா என்ன பாசமிகு காட்சின்னு சொல்லிக்கறான் மாயன். அக்கா இனிமே உங்களை தப்பா நினைக்க மாட்டேன்னு தாமரை சொல்ல,சரி..நீ சாப்பிட்டியா போயி சாப்பிடு.நானும் வரேன்னு சொல்றா தேவி.
எங்க நானும் உங்களை கட்டிக்கறேன்னு இரண்டு கைகளை விரித்து மாயன் ஒடி வர...டேய்...தாமரை என்கிட்டே பர்மிஷன் கேட்டாளான்னு கேட்கிறாள். ஓ..அப்படியா இதோ நானும கேட்காமல் வர்றேன்னு மறுபடியும் வர, இதுக்கெல்லாம் ஒரு நேரம் காலம் வரும்.அப்போ எனக்கு சர்பிரைஸ் குடுன்னு சொல்லிட்டு உள்ளே போயிடறா தேவி.