Naam iruvar namakku iruvar serial: மாயன் காமெடி... ஐயோடா செம கலக்கல்!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன் செய்யும் காமெடிகள் செம கலக்கலா சிரிக்க வைக்கிறது. மாயனாக நடித்து இருக்கும் நடிகர் செந்திலின் காமெடி முக பாவனைகள் அசத்தல்.
அரவிந்த் மாயன் என்கிற இரட்டை வேடத்தில் இரட்டை பிள்ளைகளாக செந்தில் நடிச்சு இருக்கார். இரட்டை வேடத்துக்கும் வித்தியாசம் காண்பித்து நடித்து இருப்பதும் நன்றாக இருக்கிறது.
மாயன் மதுரை பாஷை பேசி நடித்து இருப்பதும் கேட்க, பார்க்க அருமையாக இருக்கிறது. அவரது உடை,நடை,பாவனை என்று அனைத்தும் ரசிக்க வைக்கிறது. இவருக்காக சீரியல் பார்ப்பவர்கள் ஏராளம்.
தேவி மீது கோபம்
தேவி மாயனை டைவர்ஸ் செய்ய சம்மதம் என்று சொல்ல கோர்ட்டுக்கு வராமல் இருந்துவிட, குடும்பத்தாருக்கு தேவி மீது கோபம் வந்துருது. மாயனும், வீட்டை விட்டுப் போகாமல் இங்கே இருப்பது அவங்களுக்கு பிடிக்கலை. அதனால், சாப்பிடும்போது தேவியிடம் யாரும் பேசாமல் இருக்க, தேவி என்கிட்டே ஏன் யாரும் பேச மாட்டேங்கிறீங்கன்னு கேட்டும் யாரும் பதில் சொல்லலை.
நெட்டப்பு சொட்டப்பு
சித்தப்பா முறைகாரர் சொட்டையாக இருப்பதால் அவரை சொட்டப்பு என்றுதான் மாயன் அழைப்பான். பொண்டாட்டி தேவியின் தம்பி நல்ல உயரமாக இருப்பதால், அவனை நெட்டப்புன்னுதான் கூப்பிடுவான் அவன் பெயர் கார்த்திக். சாப்பிட வந்த மாயன், என்ன சொட்டப்பு இன்னிக்கு என்ன சாப்பாடுன்னு கேட்டுட்டு, நெட்டப்பு என்ன அப்படி பார்க்கறே? பத்து சப்பாத்திதான் சாப்பிட்டு இருக்கே.. டயட்ல இருக்கியா... வளர்ற பிள்ளை நல்லா சாப்பிடுன்னு சொல்றான் மாயன்.
பதில் சொல்றீங்க
சொட்டப்புன்னு கேட்டா, அவர் இதென்ன ஹோட்டலாடா... என்ன சாப்பாடுன்னு கேட்கறே..தொறந்து பார்த்தா என்ன இருக்குன்னு தெரிய போகுது. பார்த்து சாப்பிடேண்டான்னு அவர் சொல்ல, இந்த வீட்டு மாப்பிள்ளை உங்களுக்கு உரிமை இருக்கு என்ன கேள்வி வேணும்னாலும் கேளுங்கன்னு தம்பி சொல்ல, வேணும்னறதை வச்சு இருக்கேன்..எடுத்து போட்டு சாப்பிடலாம்னு அத்தை சொல்ல மாயன் சிரிச்சுக்கிட்டு, என்கிட்டே இவளோ பேசறீங்க. தேவி கூப்பிட கூப்பிட பேசாம இருக்கீங்கன்னு சொல்றான்.
கோபம் என்மேலதானே
உங்க கோபம் என் மேலதான் இருக்கணும். அவங்க மேல எதுக்கு காமிக்கறீங்கன்னு கேட்கறான். தேவி, உனக்கு இவர் கூடத்தான் வாழ ஆசைன்னா சொல்லி இருக்கலாமே. அதுக்கு எதுக்கு இப்படி நம்ப வச்சு எங்களை ஏமாத்தறே.. நீ எங்களை ஏமாத்தறதா நினைச்சு உன்னையே ஏமாத்திக்கறேன்னு சொல்ல..நெட்டப்பு சூப்பரா பேசினேப்பா.. நான் லைக்ஸ் போடறேன்னு சொல்லி மாயன் கலாய்க்கறான்.
வயிறு வேற
அவங்க இடத்தை காலி செய்துட்டா, மாயன் சப்பாத்தியை தேவிக்கு வச்சுட்டு மதுரை காரய்ங்க தோசைதான் சாப்பிடணும்... சப்பாத்தி செய்து வச்சு இருக்காய்ங்க... சாப்பிடுங்கன்னு சொல்றான். ஏண்டா உனக்கு கஷ்டமா இல்லை..எல்லாரும் சாப்பிடாம எழுந்து போறாங்க. நீ மட்டும் சாப்பிடறே உனக்கு கஷ்டமா இல்லையான்னு கேட்கறா. ஏங்க வயிறு வேற மனசு வேற டிபார்ட்மென்டுங்க.. அது பசிக்கும்னு சொல்லிட்டு அவன் சாப்பிடறதை வேடிக்கை பார்க்கிறாள் தேவி.