naam iruvar namakku iruvar serial: நேரா அப்பா ஆகமாட்டே.. மாமாதான் ஆவே!
சென்னை: தாமரையும் அரவிந்தும் சேர்ந்தாச்சு.. மாயனின் தங்கை ஆனந்தியை தேவியின் தம்பி கல்யாணம் செய்துக்க சம்மதிச்சாச்சு.
இன்னும் மாயனும் தேவியும்தான் பாவம் வாழ்க்கையை ஆரம்பிக்கலை. ஆனாலும் தேவி மாயனிடம் ரொம்பதான் போங்கு காமிக்கறா.
இதெல்லாம் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடக்கற கதைங்க.அதைத்தான் சொல்லிக்கிட்டு இருக்கோம்.
தேவி மாயன்
ஒரு வழியாக மாயனின் தங்கை ஆனந்தி, தேவியின் தம்பி இருவரின் காதலை வீட்டார் ஏத்துக்கிட்டாங்க. இருவருக்கும் எப்போது கல்யாணம் செய்து வைக்கலாம்னு பேசவும் ஆரம்பிச்சுட்டாங்க.இதுக்கு நடுவில் பிரிஞ்சு இருந்த அரவிந்தும் தாமரையும் கூட சேர்ந்துட்டாங்க.
ஆசையாய் காதலை
தேவி மாயனிடம் ஆசையா காதலை சொல்ல வரும்போதெல்லாம் செய்யாத தப்புக்காக மாயன் தேவியிடம் மாட்டிக்குவான். கடைசியில் தம்பி அரவிந்துக்காக ஜெயிலுக்கு போயிட்டு வந்துட்டான்.ஜெயிலுக்கு போன நாளில்தான் காதலை சொல்லலாம் என்று தேவி காத்து இருக்க. மாயன் ஜெயிலில். அப்போதும் தேவி மாயனை தப்பாகவே நினைச்சுக்குவா.
மாயனை பிடித்தாலும்
சில சமயங்களில் மாயனைப் பிடித்து இருந்தாலும் அதை சொல்லாமல் சுற்றி வளைத்து பேசி போங்கு காமித்து விடுவாள். மாயனும் சரி வுடுங்கன்னு சொல்லி, சிச்சுவேஷன் சாங் போட்டு சந்தோஷப் பட்டுக்குவான்.இப்போ ஒரு மாசம் நாம் சேர்ந்து வாழ்ந்து பார்க்கலாம்டான்னு சொல்லி இருக்கா தேவி.
மறந்துட்டியாடா நீ
மாயன் உட்கார்ந்து இருக்க என்னடா நான் சொன்னதை நீ மறந்துட்டியான்னு கேட்கிறாள். இல்லைங்க ஒரு மாசம் சேர்ந்து வாழ்ந்து குடும்பம் நடத்தி பார்க்கலாம்னு சொன்னீங்க.நீங்க சரின்னு சொல்லுங்க இன்னிக்கே ஆரம்பிச்சுருவோம்னு சொல்றான். ஆனா,எப்படி ஆரம்பிக்கலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்னு இவன் சொல்ல, இப்படியே யோசிச்சுகிட்டு இருடா.. ஆனந்திக்கும் தம்பிக்கும் கல்யாணம் ஆகப் போகுது.
நீ முதலில் அப்பாவாக மாட்ட..ஸ்ட்ரெயிட்டா மாமாதான் ஆகப்போறேன்னு சொல்றா. இல்லைங்க..நாம வாழ ஆரம்பிச்சுரலாம்னு சொல்ல,அவ ஒரு மாசம் தன்னை காப்பாத்த வேண்டிய லிஸ்ட் போடறா பாருங்க...தலை சுத்துது மாயனுக்கு!