Naam iruvar namakku iruvar serial: ஆர்ஜே. செந்திலை கொண்டாடும் விஜய் டிவி!
சென்னை: விஜய் டிவியின் ஆஸ்தான நடிகர் ஆர்ஜெ. செந்தில். இவரைத் தொடர்ந்து தங்களது டிவியின் சீரியல்களில் நடிக்க வைத்து அழகு பார்க்கிறது விஜய் டிவி.
மதுர, சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை என்று வரிசையாக வாய்ப்பு கொடுத்து, இவரையும் இவரது மனைவி ஸ்ரீஜாவையும் கொண்டாடியது விஜய் டிவி.
இப்போது செந்தில் மட்டும் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்து வருகிறார்.
செந்தில் மாயன்
அண்மையில் விஜய் அவார்ட்ஸ் நடத்தியபோது, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனாக நடித்த செந்திலுக்கு முதல் ஹீரோ விருது கொடுத்து கவுரவித்தார்கள். அப்போது மேடையில் ரொம்ப குதூகலமாக மாயனாக வலம் வந்தார் செந்தில், அதோடு சின்ன மாயன் என்று ஈரமான ரோஜாவே சீரியல் நாயகன் வெற்றிக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
மீனாட்சி சரவணன்
அண்மையில் விஜய் அவார்ட்ஸ் நடத்தியபோது, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனாக நடித்த செந்திலுக்கு முதல் ஹீரோ விருது கொடுத்து கவுரவித்தார்கள். அப்போது மேடையில் ரொம்ப குதூகலமாக மாயனாக வலம் வந்தார் செந்தில், அதோடு சின்ன மாயன் என்று ஈரமான ரோஜாவே சீரியல் நாயகன் வெற்றிக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
மீனாட்சி சரவணன்
மதுர, சரவணன் மீனாட்சி காலத்தில் இருந்தே விருதுக்கு நாமினேட் ஆனால், சரவணன் ஜெயித்து விடுவார்.அப்போது இருவருக்குமே விருது கிடைத்தது என்பது குறிப்பிட்டது தக்கது. சரவணன் மீனாட்சி அடுத்தடுத்த சீசன்களில் இவர்கள் இருவரும் நடிக்காமல் விலகிக் கொண்டனர். அதன் பின்னர் மாப்பிள்ளை சீரியலில் மனைவியுடன் நடித்தார் செந்தில். அது ரேட்டிங்கில் இட,ம் பிடிக்காமல் விரைவில் முடிந்தது.
நாம் இருவர் நமக்கு இருவர்
இப்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலம் மக்களை கவர்ந்து இழுத்து வருகிறார் செந்தில். விஜய் டிவியின் சீரியல் குடும்பங்கள் இணைய, என்கிட்டே மோதாதே என்று ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி. இதில் மோதும் சீரியல்கள் விளையாட்டுக்கள் விளையாடி ஜெயிக்கும் அணிகள் தோற்கும் அணிகள் என்று வாரா வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டது.
இரு சீரியல் குடும்பங்கள்
கடைசி இரு சீரியல்களாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் குடும்பமும், பாரதி கண்ணம்மா சீரியல் குடும்பமும் விளையாடியது. இதிலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் குடும்பத்தின் மாயனுக்கு அதாவது செந்திலுக்கு கோப்பை வழங்கப்பட்டது.
இப்படி செந்திலை விட்டுக் கொடுக்காமல் கைப்பிடித்து தனது பயணத்தில் இணைத்து அழைத்துச் செல்கிறது விஜய் டிவி.