Naam Iruvar Namakku Iruvar: ஆத்தீ என்னா குத்து.. வாயில வெங்காயத்தை வச்சு.. ஒரே மிதி!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இந்த ஒரு வாரமாக தேவி ரவுடி ரங்கம்மாவாக நடித்துக்கொண்டு மதுரையை கலக்கி வருகிறார். வர வர பயங்கர டெர்ரர் களங்களாக மாறி வருதுபா இந்த டிவி சீரியல்கள் எல்லாம்.
இந்த விஜய் டிவியில் வரும் சீரியல்தான் நாம் இருவர் நமக்கு இருவர். கதை எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். இப்ப அது இல்ல மேட்டர். இன்று மாலை வரப் போகிற எபிசோடுக்கான டீசர்தான் கில்லியாக கிலி கிளப்பியுள்ளது.
ஒரு அதகளமான சண்டைக் காட்சியைத்தான் இன்று ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள். சண்டைன்னா அப்படியே ரஜினி மாதிரி வானில் பறந்து பறந்து எல்லாம் இல்லை. எல்லாமே தரையில்தான்.
டொம் டொம்
பாத்து அடிம்மான்னு மட்டும் வார்த்தை வந்தது. அதற்குப் பிறகு வந்தது எல்லாம் டொம் டொம் சத்தம்தான். விழுந்துச்சு பாருங்க அடி உதை. செம குத்து.. வயிற்றிலேயே டுமீல் டுமீல்னு குத்து.. உங்க வீட்டு குத்து எங்க வீட்டு குத்து கிடையாது.. ஊர் நாட்டு குத்து.
Roja Serial: கொத்துச் சாவியை குடு ரோஜா.. ஹேங்கரில் மாட்டிடறேன்!
டமால் டுமீல்
பிறகு முதுகில் அடி.. முகத்தில் குத்து.. கார் டிக்கியில் போட்டு டிக்கியிலேயே உதை.. தூக்கிப் பிடிச்சு டமால் டுமீல். வாழ்க்கையில் எங்கேயுமே இப்படி ஒரு அடி உதை குத்தை அவர் சந்தித்திருக்க முடியாது.
கார் பறக்குது
நல்லா அடித்து துவைத்த பிறகு கார் டிக்கியில் திணித்து காருக்கு ஒரு உதை.. கார் தானாக பறந்து ஓடுகிறது. எல்லாம் முடிந்த பிறகு எகத்தாளமாக ஒரு நடை.. அப்படியே ஜாலியாக வீரமாக கெத்தாக.
ஸ்டைலுக்கு வேற
வாயில் வெத்தலை போட்டு மென்னுக்கிட்டே.. அந்த செவந்த உதடு இன்னும் செவப்பாகி பார்ப்பவர்களை கிளுகிளுக்க வைக்கிறது. பிறகு கூட்டத்தினரைப் பார்த்து இரண்டு கையையும் மேலே தூக்கி ஒரு பெரிய கும்பிடு போட்டு ஸ்டைலாக ஒரு லுக்.
ஆசை லேடி டான்
தேவி மாயனிடம் நான் இந்த ஒரு வாரத்துக்கு லேடி டானா நடிக்கணும்டான்னு தன் ஆசையை வெளிப்படுத்த, ஏற்கனவே டான் என்று வெறும் பெயர் மட்டுமே வாங்கி இருக்கும் மாயன், கொஞ்சம் உதறலோடு சரிங்க உங்க ஆசையை நிறைவேத்தி வைக்கிறேன்னு அவளை ரவுடி ரங்கம்மாவாக்கி கார்ல அழைச்சுகிட்டு மதுரையை சுத்தி வரும்போதுதான் இந்த அலப்பறை நடக்குது.
பார்க்க போனால் மாயனே கூட தேவியின் இந்த ரவுடித் தனத்தை எதிர்பார்க்கவில்லை என்பதுதான் கதை. இன்னிக்கு மறக்காம இந்த சீனைப் பார்க்கணும்பா... ஆத்தாடி என்னா குத்து... !