Nachiyarpuram Serial: தம்பதியர் காதலர்களாக கலக்குங்க...!
சென்னை: சீரியல் நடிகை ரக்ஷிதா சன் டிவி முதல் பல தொலைக்காட்சி சேனல்களில் நடித்தவர். ஆனாலும் அவரை அடையாளம் காட்டியது விஜய் டிவிதான்.
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டாம் சீசன், மூன்றாவது சீசன் என்று ஆரம்பித்து பெரும் புகழடைந்தார்.அதற்குப் பிறகு விஜய் டிவியின் எந்த சீரியலிலும் இவர் நடிக்கவில்லை.
பல ரியாலிட்டி ஷோக்களில் கணவர் தினேஷுடன் கலந்துக் கொண்ட இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஜீ தமிழ் டிவியின் எதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கறது, நடுவராக இருப்பது என்று இருந்தார்.
நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா.. டெங்கு.. வடிவேலு மீம்ஸ்!
ஜீ தமிழ் டிவி
அப்படியே ஜீ தமிழ் டிவியின் நாச்சியார்புரம் சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிப்பில் கலக்கி வருகிறார் . அது மட்டுமா இவரது காதல் கணவர் தினேஷ்தான் இவரது ஜோடியாகவும் இந்த சீரியலில் நடித்து இருக்கார். இருவரும் ரியல் தம்பதியாக இருந்தாலும், ரீலாக காதலர்களாக நடிக்கிறார்கள்.
மதுரை பையன்
ரக்ஷிதா பெங்களூரு பொண்ணு, இவர் காதலித்த தினேஷ் மதுரைப் பையன் இருவரும் பிரிவோம் சிந்திப்போம் சீரியலில் நடிக்கும்போது காதலிக்க ஆரம்பித்து பின்னர் கல்யாணமும் செய்துகொண்டு இருக்கிறார்கள். பெங்களூருவில் இருந்த போதே தமிழ் நன்றாக பேசுவேன். எங்களை சுத்தி தமிழ் பேசறவங்கதான் இருந்தாங்க என்று கூறுகிறார் ரக்ஷிதா.
பிடிக்கும் மதுரை
கணவர் ஊரு மதுரை ரொம்ப பிடிக்குமாம். மாமியார் எந்த வேலையும் செய்ய விடாமல் தனது கையில் வச்சு தாங்குவது போல பார்த்துப்பாங்க. அவ்வளவு அன்பு என் மேல என்றும் கூறி பூரித்துப் போகிறார். மதுரையில் இரவு வெகு நேரம் ஆனாலும் ரோட்டோர சாப்பாடு கடைகள், டீ கடைகள் இரவு வெகு நேரம் திறந்து இருக்கும்.
இட்லி சாப்பிட
அப்போது ஊர் சுற்றி வந்து இட்லி சாப்பிடவும் டீ சாப்பிடவும் ரொம்ப பிடிக்கும். அந்த ஊரில் விடிய விடிய தொழிலாளர்கள் வேலை செய்வார்கள். சாப்பிடுவார்கள், டீ குடிப்பார்கள் அதனால் எப்போதும் மதுரை நகரம் ஜேஜே என்று இருக்கும் என்று கூறுகிறார்.