For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதிரியா இருந்தாலும் மத்தவங்ககிட்ட விட்டு குடுக்க மாட்டான் இந்த நாகப்பன்...!

Google Oneindia Tamil News

சென்னை: கிழக்கு வாசல் சீரியல் ஒரு ஊரின் மீனவ குடும்பங்களை கட்டிக் காக்கும் இரு பெரிய தலைவர்கள் பற்றிய கதை.

நாகப்பனிடம் பாதி குடும்பங்கள்... தேவராஜிடம் பாதி குடும்பங்கள் என்று அடைக்கலம் புகுந்து இருக்காங்க. ஆனா,இவங்க குடுமபத்துக்கும் அவங்க குடும்பத்துக்கும் பகை.

இந்த பகை இரு தரப்பு ஆதரவு குடும்பங்களின் இடையேயேயும் வளர்ந்து விருட்சம் போல பெரும் பகையாகி இப்போது நிற்குது.

அழகம்மை இன்றைய கல்லூரியில் படிக்கும் பையன் பெண்களுக்கு தேவையான அம்மா.....ரைட்?அழகம்மை இன்றைய கல்லூரியில் படிக்கும் பையன் பெண்களுக்கு தேவையான அம்மா.....ரைட்?

மீன் பிடி வலையில்

மீன் பிடி வலையில்

தேவராஜ், நாகப்பன் இடையே படகுப் போட்டி நடக்குது. இந்த படகுப் போட்டி கொஞ்சம் வித்தியாசமானதா இருக்கு. தேவராஜும் ,நாகப்பனும் மீன் பிடிக்க போகணுமாம்.. யார் வலையில் அதிகம் மீன்கள் சிக்குதோ, அவங்கதான் மீனவர்கள் பிடித்து வரும் மொத்த மீன்களையும் குத்தகைக்கு எடுக்க முடியுமாம்.

இதனால் எதிரி மீனவ குடும்பங்களுக்கு

இதனால் எதிரி மீனவ குடும்பங்களுக்கு

இதனால் எதிரி தரப்பு மீனவர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுமாம்...ஜெயிச்சவங்க வைக்கும் விலையில்தான் மீனவர்கள் மீன் விற்க வேண்டும் என்பதே விதிமுறை. இத்துடன் மூன்றாவது முறையாக தேவராஜ் ஜெயிச்சுட்டார்.

ஓட்டையான மீன் பிடி வலை

ஓட்டையான மீன் பிடி வலை

போலீஸ் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் நாகப்பனின் மீன் பிடி வலையில் பெரிய ஓட்டை விழுந்து இருப்பது போலீசுக்கு தெரிய வருது. போலீஸ் நாகப்பன் வீட்டுக்கு போயி, கம்பளைண்ட் எழுத தர சொல்றார்.

கெடுதல் செய்தது எதிரியானாலும்

கெடுதல் செய்தது எதிரியானாலும்

நாகப்பன் சொல்றார்... எனக்கு கெடுதல் செய்தது எதிரியாக இருந்தாலும் நான் அவரை யாரிடமும் காட்டி குடுக்க மாட்டேன்.. அவருக்கு தண்டனை என் கையிலதாம்ல... இதெல்லாம் எங்களுக்கு உண்டான பழக்க வழக்கம்.இதில யாரும் தலையிட நாங்க விட மாட்டோம்.. நீங்க அப்படியே போயிருங்கன்னு நாகப்பன் கோவமா சொல்றார்.

என்ன செய்யறதுன்னு எனக்கு

என்ன செய்யறதுன்னு எனக்கு

என்ன செய்யறதுன்னு எனக்கு தெரியும்ல...என்னை நம்பி இருக்கறவங்க இந்த ஊரை விட்டு காலி பண்ணி போறேன்னு சொல்றாங்க. அவங்க இந்த ஊரை மட்டும் இல்லை... என்னை விட்டு போறாங்கன்னு நான் துடிச்சு போயிட்டேன்..அது எனக்குதாம்ல தெரியும்.இந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன்...போலீஸ்கார் நீங்க உங்க கடமையை செய்யுங்க... ஆனா,நான் மட்டும் தேவராஜ் மேல கேஸ் தர மாட்டேன்னு அடிச்சு சொல்றார்.

கிழக்கு வாசல் கிராமம் மக்களை எப்படி கட்டிப்போட்டு வச்சு இருக்கு பாருங்க...

English summary
The kizhakku vasal serial is the story of the two great leaders who are facing the fishing families of a village.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X