இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த பாம்பையே பிடிச்சுட்டு அலைவீங்க பாஸ்.. நாகினி பரிதாபங்கள்!
சென்னை:கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் நாகினி 3ம் பாகம் இன்னும் கூட அதே பழி வாங்கல், நாகமணியை எப்படியாவது கைப்பற்றதுடிக்கறதுன்னு கதை நகருது...
நாகமணி தனது பிள்ளை மகேஷ், மீனா அதாவது அன்னிக்கு ரொமான்ஸ் பண்ணினாங்களே அவங்க கையில் இருக்குதுன்னு பெத்த அம்மாவுக்கும், அவங்களை சேர்ந்த சதிக்காரர்களுக்கும் தெரிஞ்சுருது.
மகன் மருமகளை கொன்று நாகமணியை கைப்பற்ற துடிக்கிறார்கள் இவர்கள். மகேஷ், மீனா தங்கி இருக்கும் வீட்டுக்கு செல்ல, மீனாவோ, சிவனுக்கு நன்றி சொல்ல ஒரு இச்சாதாரி நாகமாக கோயிலுக்கு சென்று இருக்கிறாள்.
இச்சாதாரி நாகங்கள் பெண் உருவம் எடுத்து சிவன் முன் நடனமாடி தங்களது நன்றியைத் தெரிவிப்பது வழக்கமாம்.மீனா சென்றிருந்த நேரத்தில்தான், மகேஷை தாயாரும், அவளது சதி கும்பலும் பாம்பு உருவம் எடுத்து பாடாய் படுத்துகிறார்கள்.
காற்றில் பறக்காது...நீரில் கரையாது...நெருப்பில் கருக்காது...அது எது என்ன சொல்லு என்று மகிஷிடம் கேட்கிறாள் தாய்.பின்னர் அவளே பதிலும் சொல்கிறாள், அதுதாண்டா நாகமணி. அது எனக்கு வேணும், அதனால பெத்த பையன்னு கூட பார்க்க மாட்டேன்.
வீட்டையே கொளுத்திட்டா நீயும் செத்து போயிடுவே, நாகமணியும் எனக்கு கிடைச்சுரும், நீ அதை இங்கதான் வச்சுக்கன்னு தெரியும்னு., வீட்டையே கொளுத்துகிறார்கள். மீனா ஒரு இச்சாதாரி நாகம் என்பதால், அவளது உடைந்த வளையலை கையில் வைத்திருக்கும் மகேஷுக்கு எதுவும் ஆகவில்லை.
இப்படியுமா இருப்பார்கள் பெண்கள்.. மாமியார்கள் குலத்துக்கே இவர்கள் மிகப் பெரிய அவமானம்.. !
ஆனால், எரிந்து நாசமாகிக் கிடக்கும் வீட்டைப் பார்த்து கதறி அழுகிறாள் மீனா. நாகமணி யார் கைக்கு போகும்.....பார்ப்போம்.