Nayagi Serial: டாப் டூ பாட்டம்.. ஒரே குடும்ப வயலன்ஸ்.. ஆனாலும் ரேட்டிங்கில் டாப்!
Recommended Video
சென்னை: குடும்பத்துக்குள் வன்முறை தூண்டும் சீரியலாகத்தான் சன் டிவியின் நாயகி சீரியல் இருக்கிறது. ஆனால், ரேட்டிங்கில் இதுதான் முதலிடம்.
அப்பா பிள்ளை வாழ்க்கைக்கே தடையாக இருக்கிறார்.இன்னொரு குடும்பத்தில் அண்ணன் வாழ்க்கைக்கு உலை வைக்க நினைக்கிறான் தம்பி. மகனையே கோபத்தில் ஒதுக்கி வைக்கும் தாய்.
ஒரு வருஷம் நாடகம் நடத்தி, பொய் சொன்னாள் என்று கட்டின பொண்டாட்டியை ஒதுக்கி வைத்திருந்த புருஷன்...இப்படியே கதை போகுது. இது குடும்ப சீரியல் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
கலிவரதன் ஆனந்தி
ஆனந்தியின் அப்பாவை கொன்றுவிட்டு, அவரின் சொத்துக்களை அடைந்து, பெரும் பணக்காரராக சமூக அந்தஸ்துடன் இருக்கிறார் கலிவரதன். பிறகு இறந்தவரின் வாரிசு ஆனந்தி என்று தெரிந்து கொண்ட கலிவரதன், அவளை கொல்ல நினைக்கிறார். அதுவும் அவரது மகன் திருமுருகனை காதலித்து கல்யாணம் செய்துகொண்டு தனது மருமகளாகிவிட்டவள் என்று தெரிந்தும்.. சொத்துக்கள் வேண்டும் என்று கூட அந்த வாரிசு கேட்காத பட்சத்தில் விட்டுவிடலாமே.
அனன்யா ஆனந்தி
ஆனந்தி திருமணம் செய்துகொண்ட திருவை சின்ன வயதில் இருந்து காதலித்தவள் என்று அனன்யா கதாபாத்திரம். இவள் தெரியாத,அறியாத வேலைகளையும் பெண்களுக்கு கற்றுக் கொடுப்பதாக இருக்கிறாள்.திருவுக்கே தெரியாமல் அவனது உயிரணுக்களை சேகரித்து, செயற்கை கருத்தரிப்பு மூலம் தன்னுடைய வயிற்றில் குழந்தையாக வளர்ப்பது என்று அனன்யா செய்யும் அத்தனை வேலைகளும் கொடுமையாக இருக்கிறது.
செழியன் கண்மணி
கண்மணியை காதலித்த செழியன் நேர்மை தவறாதவன் என்று காண்பித்து, அவனை ஏமாற்றி கல்யாணம் செய்துகொண்ட மனைவி கண்மணியை ஒரு வருஷம் தள்ளி வைக்கிறான். இது கூட பரவாயில்லை. இவனை பிடிக்காத இவனின் தம்பியே அண்ணனுக்கும், அண்ணிக்கும் தீங்கு நினைக்கிறான்.கடைசியில் அண்ணியின் வயிற்றில் வளரும் சிசுவை மருந்து கொடுத்து கலைக்க தீர்த்தம் என்று அண்ணியிடம் கொடுக்க செய்கிறான்.
கரு கொலை
குடும்ப சீரியலில் கருவிலிருக்கும் சிசுகொலை இதுவரை அதே குடும்பத்தில் இருக்கும் பெண்கள் செய்யும் வேலையாக இருந்தது. இப்போது பார்த்தால் ஒரு ஆண்,அதுவும் தனது அண்ணியின் வயிற்றில் வளரும் குழந்தையையே அழிக்கத் துணிகிறான். சீரியல் முழுக்க வஞ்சகம், பழி, பாவம்,போராட்டம் என்றே நீள்கிறது. இதை குடும்ப சீரியல் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ரேட்டிங்கிலும் முதலிடத்தில் இருக்கிறது.
நிஜமாக மக்களை சீரியஸ் மூடிலேயே கொண்டு செல்லும் இப்படிப்பட்ட சீரியல்களுக்கு தடை விதிக்க வேண்டும். அது இல்லாமல் போகும் பட்சத்தில் வருத்தமே மிஞ்சும்.