Nayagi Serial: இதுதான் தலையணை மந்திரம்னு சொல்வாங்களே.. அதுவா?
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.இதை முந்துமா ரன் என்கிற எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லை. இரண்டுமே விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பு சீரியல்கள்.
நாயகி சீரியல் வரை விழித்திருந்து பார்த்துவிட்டு உறங்க சென்றுவிடும் வழக்கம்தான் இன்னும் கிராமங்களில் உள்ளது. அதனால், ரன் சீரியல் ரேட்டிங்கில் இடம் பிடிக்குமா என்பதில் சந்தேகம்தான் இருக்கிறது.
நாயகி சீரியலில் ஒரு வழியாக கண்மணிக்கும், செழியனுக்கும் முதலிரவு நடந்தாச்சு. இப்போது மந்திரம் போட்டது போல செழியன் கண்மணி நினைவிலிலேயே இருக்கிறான்.
முதலிரவு நடந்து
திருமணமாகி ஒரு வருடத்துக்குப் பின்னர், செழியனுக்கு கண்மணியுடன் முதலிரவு நடந்து விடுகிறது. இப்போது ஆஃபீஸுக்கு போன செழியனுக்கு கண்மணி நினைவாகவே இருக்கிறது. வீட்டில் கண்மணிக்கு செழியனின் நினைவாகவே இருக்கிறது. சமையல் கரண்டியை கையில் வைத்துக்கொண்டு சமைக்காமல் வாசலை பார்த்து பார்த்து ஓடுகிறாள்.
ஹனி கண்மணி
அலுவலகத்தில் கண்மணிக்கு போன் செய்து என்ன மந்திரம் போட்டியோ கண்மணி.. உன் நினைவா இருக்கு. நீ வசியம் வச்சுட்டேன்னு வழியறான். ஹல்க்.. நீங்கதான் என்னை வசியம் பண்ணி வச்சுட்டீங்க. இப்பவும் உங்களைத்தான் நினைச்சுகிட்டு இருக்கேன்னு சொல்றா. அரை நாள் லீவு போட்டுட்டு வந்துடட்டுமான்னு செழியன் கேட்க, அத்தை தப்பா நினைச்சுக்கப் போறாங்கன்னு இவள்சொல்ல அவன் கோச்சுக்கறான். சரி வாங்க ஹல்க்ன்னு செல்லப்பேர் வச்சு சொல்ல, ஓகே ஹனின்னு சொல்றான்.
வாசலுக்கு ஒடி
வீட்டுக்குள் வந்தால், வண்டி சத்தம் கேட்குது. செழியனோ என்று இவள் கரண்டியுடன் ஓடிப் போகிறாள். இல்லை என்றதும் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறாள்.மாமனார் என்னம்மான்னு கேட்க, ஒண்ணுமில்லை மாமான்னு சொல்லிட்டு உள்ளே போறா. என்ன கண்மணி இப்படி நடந்துக்கறான்னு மாமனார் சந்தேகத்தில் பார்க்க., கரண்டியை வைத்துக்கொண்டு ஏமாற்றத்தில் இருக்கிறாள் கண்மணி.
அருகில் செழியன்
கண்மணி திரும்பிப் பார்க்கும் போது,செழியன் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வருகிறான். ஆமாம், இந்த மனுஷன் இப்படித்தான் வர்ற மாதிரி வந்து ஏமாத்துவார்னு திரும்பிக்கறா. அவன் கண்மணியின் அருகில் உட்கார, ஹல்க் என்ன இது இப்படி வந்து வந்து மாயம் காட்டறீங்க...நிஜமா எப்போ வருவீங்கன்னு கண்மணி புலம்ப, கண்மணி நான்தான் வந்திருக்கேன்னு அவளை கட்டித் தூக்கிக்கறான்.அப்புறம் என்ன அதுவரை அவள் கையில் வச்சு இருந்த சமையல் கரண்டி கீழே விழுந்துருச்சு.