உன் குத்தமா... என் குத்தமா... யாரை இதில் குத்தம் சொல்ல?
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் ரேட்டிங்கில் முதலிடத்தை தக்க வச்சுக்கிட்டே இருக்கு.
இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலா நாயகி சீரியலிருக்கு. பெரும்பாலான பெண்மணிகள் நாயகி சீரியலுக்காக வெயிட் பண்ணிட்டு, முடிஞ்சதும் இரவு வேலைகளை பார்க்க எழுந்துடறாங்க.
அந்த அளவுக்கு நாயகி சீரியல் குடும்பத்தில் பெண்மணிகளுக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. ஆண்களும் ரசிச்சு பார்க்கறாங்க..காரணம் விகடன் டெலிவிஸ்டாஸ் மேல இருக்கும் நம்பிக்கை.
படகுல படுத்துகிட்டு ஹாயா வானொலியில் பாட்டு....!
கண்மணி
ஆனந்தி,கண்மணி இருவரும் உயிர் தோழிங்க.. ரெண்டு பேருமே காதலிச்சு கல்யாணம் செய்துக்கிட்டாலும், வாழ்க்கை என்னவோ சரியா இல்லை. ஆனந்தி புருஷன் திருவுக்கு பழைய நினைவு இல்லை. கண்மணி புருஷன் செழியன் வேணும்னே விதண்டாவாதம் பண்ணிக்கிட்டு, கண்மணியை நெருங்கலை.
திரு
ஆனந்தி வாழ்க்கையில அனன்யா குறுக்க புகுந்து திருவை கல்யாணம் பண்ணிக்க பெண்கள் செய்ய கூடாத வேலைகளை எல்லாம் அசால்ட்டா செய்யறா. ஆனந்தியை கல்யாணம் செய்துக்கிட்டதை திரு மறந்துட்டதுதான் அனன்யாவின் இந்த ஆட்டத்துக்கு காரணம்.
சுகாசினி
செழியன் வாழ்க்கையில் சுகாசினி,செழியனை தான் அடைந்தே தீரணும்னு கண்மணி மேல வீண் பழி போடறா. அதை அப்படியே நம்பறான் செழியன். பொண்டாட்டியை வீட்டைவிட்டு துரத்த சுகாசினி கூட சேர்ந்து திட்டம் போடறான்
போறா கண்மணி
கண்மணி செழியன் கிட்ட எல்லா கேள்வியும் கேட்டுட்டு, நான் வீட்டை விட்டு போகணும் அவ்ளோதானே..நான் கிளம்பிடறேங்கன்னு சொல்லி கிளம்பறா.தனியா கிளம்பிப்போக, அம்மா செழியனை பொண்டாட்டியை தனியா அனுப்பினா தப்பாயிரும்டா.. நீ கொண்டு போயி விட்டுட்டு வா.நாலு நாளைக்கு இருந்துட்டு வரட்டும்னு சொல்றாங்க.
கண்மணிக்கு
செழியனுக்கும்,கண்மணிக்குமே ஒருத்தரை ஒருத்தர் பிரிய மனசில்லை. வந்துடறேன்னு சொல்லு கண்மணி உன்னை இப்படியே வீட்டுக்கு அழைச்சுட்டு போயிடறேன்னு மனசுக்குள்ள சொல்றான்.
சோ சுவீட் வாழ்க்கை!
வா கண்மணின்னு கூப்பிடுங்க இப்பவே உங்க கூட வந்துடறேன்னு இவ மனசுக்குள்ள பேசிக்கறா.... இதுக்குத்தான் புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஈகோ பார்க்க கூடாது. இப்போ பாருங்க வாழ்க்கை வீணா போகுது இல்லே...