அம்மாடி.. கரண்ட் வயரை கையில் பிடிச்சு.. ஷாக்கடிக்கும் நீலிமா!
சென்னை: இப்ப இருக்கிற சூழ்நிலையில் பல நடிகைகளும் களமிறங்கி கலக்கிக் கொண்டிருக்கும் வலைத்தளம் தான் இன்ஸ்டாகிராம். அந்த இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் நன்றாகவே பெருகி வருகிறார்கள் .
பலர் பல திரைப்படங்களிலும் சீரியல்களில் நடித்து வாங்காத பெயரைக் கூட தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டுதட்டி விடுகிறார்கள். நடிகைகளும் அதை நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
அந்த மாதிரி தான் பல சீரியல்களில் கதாநாயகியாகவும் வில்லியாகவும் நடித்துக்கொண்டிருந்த நீலிமா தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் மெய்மறந்து போய் இருக்கிறார்கள்.
"கொழுந்தனாருடன்" போட்ட குத்தாட்டம்.. கலகலக்கும் ஆலியா வீடியோ!
கலகலக்கும் நீலிமா
அதைப் பார்த்து நெட்டிசன்கள் விதவிதமாக டபுள் மீனிங்கில் கலாய்த்து வருகிறார்கள். ஒரு நடிகையாக கலக்கி கொண்டிருந்த நீலிமா தற்போது ஒரு தயாரிப்பாளராகவும் ஜீ தமிழில் என்றென்றும் புன்னகை எனும் ஒரு சீரியலை தயாரித்து வருகிறார் .அந்த சீரியலும் தற்போது நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
செம நீலிமா செம
இந்த நிலையில் இவர் இப்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து தான் இது என்ன வேற மாதிரி இருக்கு என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். முதலில் நடிகையாகவும் பின்னர் தயாரிப்பாளராகவும் தற்போது இது என்ன வேறுவிதமாக மாறி இருக்கிறீர்கள் இப்போது என்று கேட்டு வருகிறார்கள். இவர் ஒரு நடிகையாக இருந்தாலும் எப்போதும் குடும்ப குத்துவிளக்காக தான் ஜொலித்துக் கொண்டிருந்தார்.
சேலையில் ரம்யம்
ஆனால் தற்போது இவர் அரைகுறை ஆடையோடு இந்த மாதிரி இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டதும் ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள். ஏதாவது பங்க்ஷன் டைம் என்றாலே இவர் சேலை கட்டிக் கொண்டு பவ்யமாக விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
ஜன்னல் வைத்த ஜாக்கெட் போடவா
ஆனால் தற்போது ட்ரெயில் ரூம்பில் டிரஸ்சை போட்டு பார்ப்பது போல அரைகுறை உடையோடு இது வரைக்கும் இல்லாத அளவில் கவர்ச்சியில் இறங்கியிருக்கிறார். இவர் சேலை கட்டிக்கொண்டு கொண்டு இடுப்பு தெரிந்தாலே ரசிகர்கள் அதனை பெரிய விஷயமாக எடுத்து கலாய்த்து வருவார்கள். ஆனால் இப்போது உள்ளாடையோடு இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து அவர்கள் என்ன சொல்வார்கள் என்று சொல்லவா வேணும்.
நிறம் மாறாத பூக்கள்
என்றென்றும் புன்னகை மட்டுமல்லாமல் நிறம் மாறாத பூக்கள் என்னும் சீரியலிலும் தயாரித்து இருந்தவர். தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் சீரியலும் நல்லபடியாக போய்க் கொண்டிருப்பதால் அந்த சீரியலின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் 100 நாள் கொண்டாட்டத்தையும் கொண்டாடி இருந்தார்கள். தற்போது இவர் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்து சிலர் கலாய்க்கின்றனர்.
டப் கொடுக்கும் வில்லி
என்ன 100 நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்ததா என்று கலாய்க்கிறார்கள் . ஹேர் ஸ்டைல் மாற்றி தற்போது இளம் கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கிற மாதிரி இவர் வெளியிட்டிருக்கும் போட்டோக்கள் வைரலாக பரவி வருகிறது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைக்கிளி சீரியலில் வில்லியாக நடித்து இருந்தாலும் பலர் இந்த சீரியலின் இவரை நடிப்பை பாராட்டி வந்தனர்.
சூப்பர் சந்தோஷம்
இதற்கு முன்பு எந்த சீரியலிலும் இல்லாத அளவிற்கு இந்த சீரியலில் கூட இருந்தே துரோகம் பண்ணும் கேரக்டர் என்பதால் இவர் பார்த்து பார்த்து தான் நடித்து இருந்தாராம் .ஆனால் அந்த நடிப்பிற்கு தகுந்த பலன் கிடைத்ததால் ரொம்பவே சந்தோஷமாக இருந்தார்.
மோனிஷாவுடன் நட்பு
ஆனால் திடீரென்று இந்த சீரியலை முடித்ததால் ரொம்பவே கஷ்டத்தில் இருந்திருக்கிறார் .இந்த சீரியலில் இவர் நடித்த பிறகு அந்த சீரியலில் நடித்த அனைவரிடமும் நன்றாகவே இவர் பிரண்ட் ஆக மாறிவிட்டார் .அவரும் அந்த சீரியலில் ஜானு வாக வாக நடித்த மோனிஷாவும் நல்ல பிரண்டாக இப்ப வரைக்கும் இருக்கிறார்கள்.
கையில் என்ன அது
இவருடைய போட்டோக்களை பார்த்து அதுவும் கரண்டு வயரை கையில் பிடித்து வசீகரிக்கும் பார்வையை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காகி இருக்கிறார். கரண்ட் வயரை பிடித்திருப்பது என்னவோ அவர் கையில்தான் ஆனால் அதை பார்த்து அவருடைய ரசிகர்கள் தான் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.