நடிகைங்களை பார்த்தா.. டச்சப்தான் சார் பொறாமையா இருக்கு!
சென்னை: நடிகைகளை பார்த்தா இந்த டச்சப் பாய்தான் சார் பொறாமையா இருக்கு என்று நீயா நானாவில் சொல்லி இருக்கார் ஒரு பெண்மணி.
சீரியல் நடிகைகள் - அவர்களை ரசிக்கும் ரசிகைகள் என்று நீயா நானா விவாத நிகழ்ச்சி இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது.
அதன் ப்ரோமோவில்தான் ஒரு பெண்மணி இப்படி சொன்னது ஒளிபரப்பாகி உள்ளது.
கண்ணம்மா வெண்பா
பாரதி கண்ணம்மா சீரியலை ஒரு பெண்மணி ரொம்ப ஒன்றி பார்த்து வருகிறார் போலும். உண்மையில் இந்த கதை முழுக்க பொய்யே சூழ்ந்து இருக்கும், வெண்பா பாரதிக்கு குழந்தை பிறக்காது என்று பொய்யான சான்றிதழை கொடுத்து இருப்பாள். அதே வெண்பா பாரதியின் மனைவி கண்ணம்மாவுக்கும் குழந்தை பிறக்க வாய்ப்பு கம்மி என்று சான்றிதழ் கொடுத்து இருப்பாள்.
இருவருமே வேறு
இருவருமே வேறு மருத்துவரை பார்க்க வேண்டும் என்று எண்ணாமல், குழந்தை பிறக்காது என்று எண்ணிக்கொண்டு இருப்பதும், கல்யாணம் ஆகி என்னவோ ஆண்டுகள் பல ஆகிவிட்டது போல, சவுந்தர்யா அம்மா அந்த சான்றிதழை பார்த்து குழந்தை பிறக்காத கண்ணம்மா வீட்டுக்கு சுமை என்று பேசுவது போலவும் கதை செல்லும்.
வெண்பா கெட்டவள்
இதை நீயா நானாவில் கலந்துகொண்ட பெண் ஒருவர் கண்ணம்மாவாக நடித்துக்கொண்டு இருக்கும் நடிகைக்கு, அட்வைஸாக கூறுகிறார். அதாவது வெண்பா கெட்டவள், அகிலன் நல்லவன் என்று கூறிக்கொண்டே போகிறார். நடிகை சிரித்துக்கொண்டே கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
எதெல்லாம் பொறாமை
நடிகைகள் அனுபவிக்கும் எதெல்லாம் உங்களுக்கு பொறாமை தருகிறது என்று கோபிநாத் கேட்டார்.அப்போது ஒரு பெண்,அடிக்கடி மேக்கப்பை சரி செய்யும் டச்சப் பாய், அடிக்கடி ஜூஸ் கேட்டு குடிப்பது இதெல்லாம் எனக்கு பொறாமை தருகிறது என்று சொன்னார். கடைசியில் இவருக்கும் அந்த டச்சப், ஜூஸ் இதெல்லாம் கொடுக்கப்பட்டது.
கோபிநாத்தின் நீயா நானா நிகழ்ச்சி இப்படி பெண்களை முட்டாளாக்கவா?