யாரு பர்ஸ்ட் வெளியில போக போறிங்கன்னுதான் டிவிட்ஸ்டே.. நெட்டிசன்ஸ் அதகளம்..! #பிக்பாஸ் 2
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் பார்வையாளர்களை வெறுப்பேற்றும் வகையில் நடந்து கொள்கின்றனர். யாஷிகா காதலித்த மஹத் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் குறித்து வெளியாகியுள்ள புரமோவில் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் தனியாக அமர்ந்து பேசுகின்றனர். அதில் மஹத்துக்கு சப்போர்ட் செய்ததால் நம்மிடம் யாரும் பேச மாட்டேங்கிறாங்க என்று கூறும் யாஷிகா, நம்ம என்ன செய்றோமோ அதுதான் நமக்கு திருப்பி வரும், நாம் யாருக்கும் எந்த தப்பும் செய்யவில்லை என்கிறார்.
மேலும் உன் டீமில் நீ பெஸ்ட் பர்ஃபார்மர் அவார்டு வாங்கு நான் என் டீமில் பெஸ்ட் பர்ஃபார்மர் அவார்டு வாங்குகிறேன். அதுதான் நம் குறிக்கோள் என்கிறார் யாஷிகா. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
|
அடிமட்டம்
நம்ம என்ன கொடுப்போம் அதான் திருப்பி வரும்... நல்லா சொன்ன யாஷ்.. இப்போ அதுதான் உங்களுக்கு வந்துகிட்டு இருக்குமா.. இன்னுமா தெரியல..? உங்க ரெண்டு பேரோட IQ லெவல் உண்மையாவே அடிமட்டம்..
|
டிவிட்ஸ்டே
யாரு டைட்டில் வின் பண்ண போறாங்கங்கிறத விட உங்க ரெண்டு பேருல யாரு பர்ஸ்ட் வெளில போக போறிங்கன்னுதான் டிவிட்ஸ்டே..
|
அங்க சீனே இல்ல
அந்த யாஷிகா பாய்சன் வெளியில போயிட்டா இந்த ஐஸ்வர்யாக்கு அங்க சீனே இல்ல
|
எரிச்சலாக உள்ளது
இந்த பெண்களின் முகத்தை பார்க்க எரிச்சலாக உள்ளது.
|
நாங்க பார்த்துக்குறோம்
ஐசு நீ Nominate ஆனா மட்டும் போதும்... மத்தது நாங்க பார்த்துக்குறோம்
|
எதாவது செய்யுங்க
மிஸ் யூ மஹத்..
டேய் இன்னும் #Aishwarya and #YashikaAnand 2 பேரு தான்
வெளிய போயிட்டாங்கன்னா எங்களுக்கு
என்டர்டெய்மென்ட் கிடைக்காது டா....
உங்களை நம்பி தான் நாங்க Troll page நடத்துறோம்
பாத்து எதாவது செய்யுங்க