ஏய்.. குட்டை...என்ன நெட்டை.. காதலர்களின் செல்ல பேரு.. புது காதல் உருவாகுது!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் லண்டனில் படிச்சுட்டு வந்தவன் தேவியின் தம்பி துரை.
அக்கா புருஷன் மாயன் படிக்காதவன், ரவுடின்னு மாயனை லண்டன்காரனுக்கு பிடிக்கலை. எப்போ பார்த்தாலும் மாயனை அவமதிச்சுக்கிட்டே இருக்கான்.
இப்படி படிக்காதவ, விவரம் தெரியாதவள் எல்லாம் நான் கட்டிக்க மாட்டேன். லண்டன் பொண்ணுதான் எனக்கு பொண்டாட்டியா வருவான்னு வீட்டுல சொல்லிக்கிட்டு இருக்கறவன்.
இந்த சமயத்துலதான் மாயனோட தங்கச்சி சைக்கிள் ஒட்டிக்கிட்டு போயிகிட்டு இருக்கா.அவ மாயன் தங்கச்சிதான்னு துரைக்கு தெரியாது. அவ சைக்கிளில் தெரியாம காரை மோதிடறான் துரை. மாயன் தங்கச்சி கண்ணாபின்னானு திட்ட.. ஏய் குட்டைன்னு சொல்றான்.
சொல்லுடா நெட்டைன்னு சொல்றா அவ..உனக்கு புது சைக்கிள் வாங்கித் தரேன் வான்னு புதுசா சைக்கிள் வாங்கித் தர்றான். அதன் பின் கோயிலில் அவளை சந்திக்கறான்.
பணக்கார பசங்க சும்மா இருக்க மாட்டீங்களா..வஞ்சனை இல்லாம வளர்ந்து நிக்கறியே நெட்டை..ஏண்டா என்னை ஃபாலோ பண்ணிக்கிட்டு வர்றியான்னு கேட்கறா.
ஒரு தடவைத்தாங்க உங்களை குட்டைன்னு கூப்பிட்டேன். பதிலுக்கு நெட்டை நெட்டைன்னு ஓட்டறீங்க..நிஜமா கோயிலுக்குத்தான் வந்தேன். அம்மா நேர்த்தி கடன்னு சொன்னாங்கன்னு சொல்றான்.
இன்னொரு நாள் வழியில் இவன் கார் ரிப்பேராகி நின்னு போகுது. இப்போதான் சைக்கிள் செயின் கழண்டு போச்சுன்னு, லிஃப்ட் தரேன்னு சொன்னே . அதுக்குள்ளே உன் கார் ரிப்பேரா..சரி சரி வா என் சைக்கிளில் உனக்கு லிஃப்ட் தரேன்னு சொல்றா.
அவன் பின்னாடி நிக்க, என்ன நெட்டை உன்னை வச்சு நான் எப்படி ஓட்ட முடியும், உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமான்னு கேட்கறா. என்னங்க இப்படி ஓட்டறீங்க..கலாய்க்காதீங்க..நீங்க உட்காருங்க.. நான் ஓட்டறேன்னு அவளை சைக்கிளில் அழைச்சுக்கிட்டு போறான்.
அழகம்மை மருமக இப்படி படுத்தறாளே... சகுந்தலா தேவி சப்போர்ட் வேற
ஒரு புது காதல் உருவாகுது...