அச்சச்சோ நிலா மாட்டிகிட்டாளே ... அப்பா சப்போர்ட்டும் போச்சா!
Recommended Video
சென்னை: சன் டிவியில் நிலாவோட அம்மா, இப்போ இருக்கும் அம்மாதானா, அப்புறம் ஏன் சின்ன பொண்ணை உசத்தியாவும், நிலாவை வேலைக்காரியாவும் பார்க்கறாங்க?
நிலாவை ஏன் நீலாம்பரிக்கு புடிச்சு போச்சு, எதுக்காக தனது பணக்கார பையனுக்கு நிலாவைத்தான் மருமகளா கொண்டு வரணும்னு துடிக்கறாங்க... அவங்க வீட்டுல இருட்டு ரூம்ல சங்கிலியால் கட்டி வச்சுருக்கற அந்த பொண்ணு யாரு? இப்படி நிலா சீரியலில் நிலாவை சுற்றி பல கேள்விகள்.
நிலா கார்த்திக்கை எப்படி காதலிக்க ஆரம்பிச்சா, நிலா நோட்டுல இருந்த கார்த்திக் படத்தை பார்த்து, அம்மா, மாமா கேள்வி கேட்க, அப்பா வந்து காப்பாத்த நிலா கார்த்திக் கூட படிக்கற ஃபிரண்ட் மட்டும்தான்னு சொல்லி தப்பிச்சுக்கறா.
ஏழை பொண்ணு மனசை இப்படி ஏங்க வைக்கறீங்களே... நியாயமா?
ராத்திரி
இந்த சமயத்துலதான் கார்த்திக் ராத்திரி போன் பண்றான். வெளிய வான்னு கூப்பிடறான்.வீட்டுக்கு வெளியிலதான் நிக்கறேன்னு சொல்ல, அதுக்குள்ளே போனில் சார்ஜ் டவுன் ஆயிருது.
விண்ணப்பம்
நிலா கார்த்திக்கைத் தேடி கீழே வந்து, வீட்டில் நடந்த பிரச்சனை, அப்பாவிடம் பொய் சொன்னது எல்லாத்தையும் சொல்றா. கடைசியில அவள் அமெரிக்காவுல படிக்க ஸ்காலர்ஷிப்க்கு விண்ணப்பம் அனுப்ப நாளைக்குத்தான் கடைசி நாள்னு சொல்லி விண்ணப்பத்தை கொடுக்க வர்றான்.
சாய்கிறாள்
இதை உணர்ந்த நிலா கண்கள் கலங்கி அவனது மார்பில் சாய்கிறாள். அப்பாவுக்கு பிறகு நீதான் கார்த்திக் நான் நல்லாருக்கணும்னு நினைக்கறேன்னு சொல்றா.
சீன் காமிக்குது
இதை பார்த்த நிலாவின் தங்கச்சி வீட்டில் அப்பா உட்பட மொத்த பேரையும் மொட்டை மாடியில அழைச்சுக்கிட்டு வந்து சீன் காமிக்குது.. அப்பா முறைத்தபடி நிற்க..
நிலா மாட்டிகிட்டாளே என்னாகும்?