நிலா அப்பாவை நெருங்கிட்டா... நீலாம்பரிக்கு பயம் வருதே...!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலா தன் அப்பா அம்மாவைத் தேடி ஹைதராபாத் போயிருக்கா.
இதை தெரிஞ்சுக்கிட்ட நீலாம்பரி நிலாவுக்கு,ம் அவள் காதலன் அசோக்குக்கும் பல இடையூறுகள் தந்தும் நிலா அப்பா அம்மாவைக் கண்டு பிடிக்காம சென்னைக்கு போறதில்லைன்ற முடிவுல இருக்கா.
நிலாவின் அப்பா நீலாம்பரிக்கு பயந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறி, கால் டாக்சி டிரைவரா இருக்கார். நீலாம்பரி நிலாவின் அப்பாவை தான் கொன்னுட்டதா நினைச்சுகிட்டு தைரியமா இருக்கா.
நிலா சோறுன்னா என்னா.. நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே...!
காரில்
நிலாவை ஏற்கனவே ஹைதராபாத் ரவுடிகளிடம் இருந்து காப்பத்தியவரும் அப்பா ஸ்ரீதர்தான், இப்போது நிலாவை தன் காரில் சவாரியாக ஏற்றிக்கொண்டு போவதும் அப்பாதான். இருவருக்குமே இது தெரியலை.
இந்த பொண்ணு
பாவம் இந்த பொண்ணு எதையோ தேடி வந்த மாதிரியே இருக்கே... இந்த பொண்ணுன்னு நினைச்சு பேச்சு குடுக்க ஆரம்பிக்கறார் அவர். நான் ஹைதராபாத்ல 20 வருஷத்துக்கும் மேல இருக்கேன்மா... நீ எதுக்காக இங்கே வந்திருக்கேன்னு சொல்லு.. என்னால முடிஞ்ச உதவியை செய்யறேன்னு சொல்றார்.
தேடித்தான்
நான் நீங்க நினைக்கற மாதிரி பிரச்சனையாத்தான் சார் இங்கே வந்திருக்கேன்... என்னைப் பெத்தவங்க அப்பவே என்னைப் பிரிஞ்சுட்டாங்க. அவங்களைத் தேடித்தான் நான் இங்கே வந்திருக்கேன்.அவங்க இங்க இருக்கறதாத்தான் கேள்விப்பட்டு, நிச்சயம் கிடைப்பாங்கன்னு தேடி வந்திருக்கேன்னு சொல்றா.
மனசு பதறுது
நிலாவின் அப்பாவுக்கும் மனசு பதறுது...என்ன நம்ம கதை மாதிரியே இருக்குதேன்னு நினைக்கறார். உங்க அப்பா பேரு என்னம்மான்னு கேட்கறார்.நிலா ஸ்ரீரிதர்னு சொல்ல போவதற்குள், கார்த்திக் தடுத்துடறான்.
ஸாரிம்மா...எல்லார்கிட்டயும் எல்லா உண்மையையும் சொல் லவேணாம்தான்...இனிமே ஒண்ணும் கேட்கலைன்னு சொல்றார்.
என்னத்த சொல்ல...